நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

பன்றிக் காய்ச்சலுக்கு எதிரான நடவடிக்கையைத் தொடங்கிய தட்சிண கன்னடா!

கர்நாடகத்தின் கடலோரப் பகுதியான தட்சிண கன்னடா மாவட்ட நிர்வாகம் பன்றிக்காய்ச்சலுக்கு எதிரான நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது. 

News image
Updated On :5 நவம்பர் 2022, 2:42 pm IST

பன்றிக்காய்ச்சல்

கர்நாடகத்தின் கடலோரப் பகுதியான தட்சிண கன்னடா மாவட்ட நிர்வாகம் பன்றிக்காய்ச்சலுக்கு எதிரான நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது. 

இதுகுறித்து தட்சிண கன்னடா துணை ஆணையர் எம்.ஆர்.ரவிக்குமார் கூறுகையில், 

மனிதர்களுக்கோ மற்ற விலங்குகளுக்கோ இந்த காய்ச்சல் பரவாது என்பதால் மக்கள் பீதியடையத் தேவையில்லை. பன்றி இறைச்சியைச் சரியாகச் சமைத்து சாப்பிட்டால் எந்தவித பாதிப்பும் ஏற்படாது. 

நகரின் புறநகரில் உள்ள நீர்மார்கா கிராமத்தின் கேல்ராய் என்ற இடத்தில் உள்ள ஒரு பண்ணையில் கடந்த அக்டோபர் மாதத்தில் சில பன்றிகளுக்கு காய்ச்சல் மற்றும் நோய்த் தொற்றுக்கான பிற அறிகுறிகள் கண்டறியப்பட்டது. 

பாதிக்கப்பட்ட பன்றிகளின் மாதிரிகள் பெங்களூரில் உள்ள ஆய்வகத்திற்கு அக்.31ஆம் தேதி அனுப்பப்பட்ட நிலையில், அக் 31 அன்று பன்றிக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது என்று கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் அருண் வன்ட்சே தெரிவித்தார்.

முடிவுகள் வருவதற்குள் பண்ணையிலிருந்த 200 பன்றிகளில் 120 பன்றிகளுக்குத் தொற்று பரவி இறந்துவிட்டதாக அவர் கூறினார். மீதமுள்ள பன்றிகள் துணை ஆணையரின் அனுமதி பெற்று அப்புறப்படுத்தப்பட்டன.

நோயால் பாதிக்கப்பட்ட பகுதியைப் பாதிக்கப்பட்ட மண்டலமாக அறிவித்துள்ளது. அதே நேரத்தில் அதைச்சுற்றி 10 கிமீ பகுதி விழிப்புணர்வு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.