காமாக்யா கோயிலுக்குப் போகும் ஏக்நாத் ஷிண்டே அணி: இம்முறை எதற்காகத் தெரியுமா?
மாகராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் அவரது 39 எம்எல்ஏக்களும் மீண்டும் குவகாத்தியில் உள்ள காமாக்யா தேவி கோயிலுக்குச் செல்ல திட்டமிட்டுள்ளனர்.


மும்பை: மாகராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் அவரது 39 எம்எல்ஏக்களும் மீண்டும் குவகாத்தியில் உள்ள காமாக்யா தேவி கோயிலுக்குச் செல்ல திட்டமிட்டுள்ளனர்.
ஏற்கனவே, சிவசேனை அதிருப்தி எம்எல்ஏக்கள் முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக களமிறங்கி, குவகாத்தியில் தங்கியிருந்த போது, காமாக்யா தேவி கோயிலுக்குச் சென்று வழிபாடு நடத்திய நிலையில், மீண்டும் அவர்கள் அங்கேச் செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆனால், இந்த முறை, சிவசேனை அமைத்திருந்த கூட்டணியிலிருந்து பிரிந்து பாஜகவுடன் இணைந்து புதிய ஆட்சியை அமைத்திருக்கும் ஏக்நாத் ஷிண்டே அணி, தாங்கள் முன்பு இந்தக் கோயிலுக்கு வந்த போது வைத்த கோரிக்கைகள் மற்றும் வேண்டுதல்களை நிறைவேற்றிவிட்டு, காமாக்யா தேவிக்கு தங்களது நன்றிக் கடனை செலுத்தவிருப்பதாகக் கூறப்படுகிறது.
தாக்கரே தலைமையிலான மகா விகாஸ் அகாதி அரசுக்கான ஆதரவை விலக்கிக் கொண்டு, கடந்த ஜூன் மாதம் ஏக்நாத் அணி இந்தக் கோயிலுக்குச் சென்றிருந்தது. பிறகு, பாஜகவுடன் ஜூன் 30ஆம் தேதி புதிய அரசு மகாராஷ்டிரத்தில் ஆட்சியமைத்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...