தமிழக பேரவை முன்பு சத்தியாகிரக போராட்டம்! வாட்டாள் நாகராஜ் அறிவிப்பு! திருவள்ளூர் மருத்துவக் கல்லூரிக்கும் கூடுதலாக 50 மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு!அண்ணாமலையின் ‘வீ தி லீடர்ஸ்’ திருச்செந்தூர் மாநாடு ரத்து! தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூ. இடம்பெறுமா? பெ. சண்முகம் பதில்!கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்! எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர் ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

காசியாபாத்தில் 600-ஐ தாண்டிய டெங்கு பாதிப்பு!

உத்தரப் பிரதேசத்தின், காசியாபாத் மாவட்டத்தில் டெங்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

News image

கோப்புப் படம்

Updated On :10 நவம்பர் 2022, 3:35 pm IST

உத்தரப் பிரதேசத்தின், காசியாபாத் மாவட்டத்தில் டெங்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

காசியாபாத்தில் டெங்கு பாதிப்பு 600-ஐ தாண்டியுள்ளது. இருப்பினும் டெங்குவால் இதுவரை உயிரிழப்பு ஏதுவும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து காசியாபாத் உதவி தலைமை மருத்துவ அதிகாரி ராகேஷ் குப்தா கூறுகையில்,

டெங்கு நோயாளிகளுக்காக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் படுக்கைகள் தயார் நிலையில் ஒதுக்கப்பட்டுள்ளன. 

பெரும்பாலான டெங்கு வழக்குகள் நகர்ப்புறங்களில் இருந்து பதிவாகியுள்ளன. குறிப்பாக, டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் அன்றாட வேலைகள் மற்றும் இதர வழக்கமான பணிகளுக்காக தினமும் தில்லிக்கு வந்து சென்று வருகின்றனர்.

கௌசாம்பி, இந்திராபுரம், வைஷாலி, வசுந்தரா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினமும் கணிசமான மக்கள் தில்லிக்குச் சென்று வருவதால் டெங்கு நோயாளிகள் கண்டறியப்பட்டு வருகின்றனர்.

தேசிய தலைநகரை ஒட்டியுள்ள பகுதிகளில் அதிகளவு டெங்கு நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளதால், மாநகராட்சி மற்றும் சுகாதாரத் துறையினர் உஷார் நிலையில் உள்ளனர்.

இந்த பகுதிகளில் சோதனைகள் நடத்தப்பட்டு வருவதாகவும், கடந்த சில நாள்களாக தினமும் 10 முதல் 12 டெங்கு நோயாளிகள் கண்டறியப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

டெங்குவால் பாதிக்கப்பட்ட பலர் அரசு மருத்துவமனைகளுக்குச் சென்று சிகிச்சை பெறாததால், மாவட்டத்தில் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாகக் கணிக்கப்படுகிறது. 

சுத்தமான தண்ணீரில் ஏடிஸ் கொசுக்கள் பரவுவதால், மக்கள் வசிக்கும் இடங்களிலும், சுற்றுப்புறங்களிலும் தண்ணீர் தேங்கவிடாமல் பார்த்துக்கொள்ளுமாறு சுகாதாரத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.