உஸ்பெகிஸ்தானில் பிரதமர் மோடி தமிழ்நாடு ஆளுநராக கிரண்குமார் ரெட்டி? முதல்வர் விஜய்யின் நண்பர்? வேளாங்கண்ணி மாதா பேராலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் தமிழ்நாட்டில் விபத்தில் வந்ததுதான் தவெக ஆட்சி: எடப்பாடி பழனிசாமி 25 ஆண்டுகள்.. தொடரும் துயரம்! 9/11 குற்றவாளிகளின் வீட்டு மேலாளர் வெளியிட்ட தகவல்! தேசிய விளையாட்டு நாள்: முதல்வர் விஜய் வாழ்த்து!பதக்க வாய்ப்பை இழந்த இந்தியா: ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீரஜ் சோப்ரா விலகல்!நேபாள வெள்ளம்! காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 3,000 ஆக அதிகரிப்பு! பாகிஸ்தான் சென்றாரா விஜய்? பொய் செய்தி பரப்புவதில் சாதனை படைக்கும் தவெக! ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டுசூட்கேஸ், பிரியாணி டபராவில் மனித உடல்! 2வது குற்றவாளியும் கைது! தலை எங்கே? கொலை நடந்தது ஏன்?

காசியாபாத்தில் 600-ஐ தாண்டிய டெங்கு பாதிப்பு!

உத்தரப் பிரதேசத்தின், காசியாபாத் மாவட்டத்தில் டெங்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

கோப்புப் படம்

Published On :1 பிப்ரவரி 2024, 4:18 pm IST

உத்தரப் பிரதேசத்தின், காசியாபாத் மாவட்டத்தில் டெங்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

காசியாபாத்தில் டெங்கு பாதிப்பு 600-ஐ தாண்டியுள்ளது. இருப்பினும் டெங்குவால் இதுவரை உயிரிழப்பு ஏதுவும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து காசியாபாத் உதவி தலைமை மருத்துவ அதிகாரி ராகேஷ் குப்தா கூறுகையில்,

டெங்கு நோயாளிகளுக்காக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் படுக்கைகள் தயார் நிலையில் ஒதுக்கப்பட்டுள்ளன. 

பெரும்பாலான டெங்கு வழக்குகள் நகர்ப்புறங்களில் இருந்து பதிவாகியுள்ளன. குறிப்பாக, டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் அன்றாட வேலைகள் மற்றும் இதர வழக்கமான பணிகளுக்காக தினமும் தில்லிக்கு வந்து சென்று வருகின்றனர்.

கௌசாம்பி, இந்திராபுரம், வைஷாலி, வசுந்தரா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினமும் கணிசமான மக்கள் தில்லிக்குச் சென்று வருவதால் டெங்கு நோயாளிகள் கண்டறியப்பட்டு வருகின்றனர்.

தேசிய தலைநகரை ஒட்டியுள்ள பகுதிகளில் அதிகளவு டெங்கு நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளதால், மாநகராட்சி மற்றும் சுகாதாரத் துறையினர் உஷார் நிலையில் உள்ளனர்.

இந்த பகுதிகளில் சோதனைகள் நடத்தப்பட்டு வருவதாகவும், கடந்த சில நாள்களாக தினமும் 10 முதல் 12 டெங்கு நோயாளிகள் கண்டறியப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

டெங்குவால் பாதிக்கப்பட்ட பலர் அரசு மருத்துவமனைகளுக்குச் சென்று சிகிச்சை பெறாததால், மாவட்டத்தில் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாகக் கணிக்கப்படுகிறது. 

சுத்தமான தண்ணீரில் ஏடிஸ் கொசுக்கள் பரவுவதால், மக்கள் வசிக்கும் இடங்களிலும், சுற்றுப்புறங்களிலும் தண்ணீர் தேங்கவிடாமல் பார்த்துக்கொள்ளுமாறு சுகாதாரத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.