இந்தியா
அருணாசலில் நிலநடுக்கம்: ரிக்டரில் 5.7 ஆகப் பதிவு!
அருணாச்சல பிரதேசத்தின் மேற்கு சியாங்கில் மாவட்டத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
அருணாச்சல பிரதேசத்தின் மேற்கு சியாங்கில் மாவட்டத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தேசிய நில அதிர்வு மையம் கூறுகையில்,
நிலநடுக்கமானது காலை 10.31 மணியளவில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 5.7 ஆகப் பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கம் மாநிலத்தின் பிற பகுதிகளிலும் உணரப்பட்டதாகவும், இதுவரை எந்தவித சேதமும் ஏற்படவில்லை என மாவட்ட தகவல் மற்றும் மக்கள் தொடர்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.