பெரிய இதயத்துடன் உதவி செய்யுங்கள்: மோடிக்கு ஜெகன்மோகன் ரெட்டி கோரிக்கை

மாநிலங்களின் பிரிவினையின்போது உண்டான பிரச்னைகளுக்கு பெரிய இதயத்துடன் விரைவில் தீர்வு காண உதவி செய்யுங்கள் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி வலியுறுத்தியுள்ளார்.
பெரிய இதயத்துடன் உதவி செய்யுங்கள்: மோடிக்கு ஜெகன்மோகன் ரெட்டி கோரிக்கை
பெரிய இதயத்துடன் உதவி செய்யுங்கள்: மோடிக்கு ஜெகன்மோகன் ரெட்டி கோரிக்கை


விசாகப்பட்டினம்: மாநிலங்களின் பிரிவினையின்போது உண்டான பிரச்னைகளுக்கு பெரிய இதயத்துடன் விரைவில் தீர்வு காண உதவி செய்யுங்கள் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி வலியுறுத்தியுள்ளார்.

ஆந்திர மாநிலத்துக்கு இன்று வருகை தந்து, பல நலத்திட்ட உதவிகளைத் தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி. அவரது தலைமையில் இன்று ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்திலும் ஜெகன்மோகன் ரெட்டி கலந்து கொண்டார்.

ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, மத்திய அரசுடனும், குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடியுடன் நல்லிணக்கமாக செயல்பட்டு, மாநிலத்துக்குத் தேவையான உதவிகளைக் கேட்டுப் பெற்று வருகிறார்.

அந்த வகையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் பேசிய ஜெகன்மோகன் ரெட்டி, அரசியல் மற்றும் கட்சியையும் தாண்டியது நமது நட்பு. தனது ஒரே கொள்கை மாநிலத்தின் வளர்ச்சியே தான். வேறொன்றும் இல்லை. எனது மாநில மக்கள் மற்றும் மாநிலத்தின் நன்மை குறித்து மட்டுமே எனது கொள்கை அமைந்திருக்கும். இதைத் தவிர்த்து வேறு எந்தக் கொள்கைகளும் கிடையாது என்றார்.

மேலும், மாநிலத்தை எட்டு ஆண்டுகளுக்கு முன்பு இரண்டாகப் பிரித்த போது ஏற்பட்ட ஏற்பட்ட காயங்கள் (பிரச்னை) இன்னமும் ஆறாத வடுக்களாகவே உள்ளன. எனவே, பெரிய இதயத்துடன் அந்த பிரச்னைகளுக்கு உடனடியாகத் தீர்வு காண முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

சிறப்பு அந்துஸ்து, விசாகப்பட்டினம் இரும்பாலை, ரயில்வே மண்டலம் உள்ளிட்ட பல வாக்குறுதிகள் இன்னமும் நிறைவேற்றப்படாமல் இருப்பதாகவும் ஜெகன்மோகன் ரெட்டி குறிப்பிட்டிருந்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com