ஹிமாச்சல பிரதேசத்தில் 1 மணி நிலவரப்படி 38 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
காலையில் நிலவிய குளிர்ந்த சீதோஷ்ண நிலையையும் பொருட்படுத்தாமல் கிராமப்புறங்களில் பெண்கள் வரிசையில் நின்று வாக்களித்தனர்.
வாக்குப்பதிவின் முதல் ஒரு மணி நேரத்தில் 4 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகின. காலை 11 மணிக்கு 18 சதவீதம் உயர்ந்தது. தற்போது 1 மணி நிலவரப்படி 38 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
ஹிமாசல பிரதேச சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவு இன்று காலை 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது. 68 தொகுதிகள் கொண்ட ஹிமாசல பிரதேச சட்டப்பேரவைக்கான தோ்தல் மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 7,884 வாக்குச் சாவடி மையங்களில் நடைபெறுகிறது.
டிசம்பர் 8 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராக ஸ்டீஃபன் பிளெமிங் நியமனம்!

யார் தற்குறி? தகாத வார்த்தைகளால் கமெண்ட் செய்தவர்களுக்கு மிஷா கோஷல் பதில்!
சிக்கன் பிரியர்களுக்கு குட் நியூஸ்! கறிக்கடைக்காரர்கள் போராட்டம் வாபஸ்

தமிழ்நாட்டுக்கு 4 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையம்
விடியோக்கள்

2 கோடி கேட்டு நோட்டீஸ்,அதிர்ச்சி அடைந்த பெண் தொழிலாளி | GST NOTICE | Tirupathur | Woman daily-wager



