மும்பையில் சாலை விபத்து: 5 பேர் பலி!
மும்பை-புணே விரைவுச் சாலையில் பன்வேலில் கண்டெய்னர் லாரியின் மீது கார் மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். 3 பேர் படுகாயமடைந்தனர்.


மும்பை-புணே விரைவுச் சாலையில் பன்வேலில் கண்டெய்னர் லாரியின் மீது கார் மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். 3 பேர் படுகாயமடைந்தனர்.
பன்வேலில், ராய்காட்டின் கோபோலி பகுதியில் இந்த சம்பவம் இன்று காலை நடைபெற்றது.
ஒன்பது பேருடன் வேகமாக வந்த கார் பின்னால் இருந்த கண்டெய்னர் லாரி மீது வேகமாக மோதியது. இந்த விபத்தில் காரில் இருந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மீதமுள்ள பயணிகள் பன்வேல், காமோத்தேவில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அங்கு மேலும் ஒருவர் உயிரிழந்தார்.
கார் ஓட்டுநர் மீது கோபோலி காவல்நிலையத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேல் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
காரை ஓட்டிச் சென்றவரின் அலட்சியத்தால் இந்த விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...