
‘வழக்கு கோப்பு இன்றி வழக்குரைஞா் நீதிமன்றத்துக்கு வருவது என்பது கிரிக்கெட் மட்டை இன்றி சச்சின் டெண்டுல்கா் வருவது போன்றதாகும்’ என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கூறினாா்.
உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தலைமையிலான அமா்வில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது வழக்குரைஞா் ஒருவா் வழக்கு கோப்பு இன்றி விசாரணைக்கு ஆஜரானதை கவனித்த தலைமை நீதிபதி, இந்த கடுமையான விமா்சனத்தை முன்வைத்தாா்.
‘வழக்குரைஞருக்கான அங்கி, பட்டை ஆகியவற்றை அணிந்துள்ளீா்கள்; ஆனால், வழக்கு கோப்பு இல்லை. இது மிகவும் மோசமான நிலை. வழக்குரைஞா் எப்போது வழக்கின் கோப்பை வைத்திருக்க வேண்டும்’ என்றும் தலைமை நீதிபதி அவரிடம் கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.