மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

ஜார்க்கண்டில் மாவோயிஸ்டுகள் வெடிகுண்டு தாக்குதல்: ஒருவர் பலி

ஜார்க்கண்டின் மேற்கு சிங்பூம் மாவட்டத்தில் மாவோயிஸ்ட்டுகளால் புதைக்கப்பட்டதாக வெடிகுண்டு தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார். 

News image
கோப்புப்படம்
Updated On :21 நவம்பர் 2022, 7:29 am

DIN

ஜார்க்கண்டின் மேற்கு சிங்பூம் மாவட்டத்தில் மாவோயிஸ்ட்டுகளால் புதைக்கப்பட்டதாக வெடிகுண்டு தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார். 

டோன்டோ பகுதியில் உள்ள ரெங்கரஹட்டு கிராமத்தில் இந்த சம்பவம் நடைபெற்றது. இறந்தவர் உள்ளூர் கிராமத்தைச் சேர்ந்த சேதன் கொடா என்று அடையாளம் காணப்பட்டனர். விறகு சேகரிக்க அருகிலுள்ள காட்டிற்குச் சென்றபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

பலத்த காயமடைந்தவர் அருகில் உள்ள சதர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் இறந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. 

சிஆர்பிஎஃப் மற்றும் ஜார்க்கண்ட் காவல்துறையினரின் மிகப்பெரிய நக்சல் எதிர்ப்பு கூட்டு நடவடிக்கை சமீபத்தில் மாவட்டத்தில் தொடங்கப்பட்டது. மேலும், மாவோயிஸ்டுகள் பாதுகாப்புப் படையினருக்கு உயிரிழப்புகளை ஏற்படுத்தும் முயற்சியில் வெடிகுண்டுகளை நிறுவியுள்ளனர் என்று அதிகாரி ஒருவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.