அஸ்ஸாம்-மேகாலய மாநில எல்லைப் பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டிற்கும், எல்லைப் பிரச்னைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தெரிவித்துள்ளார்.
செவ்வாய்கிழமை அதிகாலையில் மேகாலய மாநிலத்திலிருந்து அசாம் நோக்கி மரக்கட்டைகளை ஏற்றி வந்த லாரி ஒன்றை அசாம் வனத்துறை தடுத்து நிறுத்தி டிரைவா் மற்றும் இருநபா்களை கைதுச் செய்தனர். உடனே, வனத்துறையினரால் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதிகாலை 5 மணியளவில் மேகாலயத்தில் இருந்து வந்த ஏராளமானோா் கைது செய்யபட்டவா்களை உடனடியாக விடுவிக்கக்கோரி கத்தி போன்ற பயங்கர ஆயதங்களுடன் வன்முறையில் இறங்கினா். இதனைத் தொடா்ந்து, நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர அசாம் போலீஸாா் துப்பாக்கிச்சூடு நடத்தினா். இதில், 6 பேர் பலியாகினர், மேலும் சிலர் காயமடைந்தனர்.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த அசாம் முதல்வர், ‘நேற்று நடந்த சம்பவத்திற்கும், எல்லைப் பிரச்னைக்கும் தொடர்பு இல்லை. கிராம மக்களுக்கும், காவல்துறையினருக்கு இடையே ஏற்பட்ட மோதல். இதுகுறித்து நீதிபதி தலைமையிலான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சிபிஐ அல்லது என்ஐஏ விசாரணைக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது’ என்றார்.
இதையும் படிக்க | அஸ்ஸாம்-மேகாலய எல்லையில் மோதல்: வன அலுவலா் உள்பட 6 போ் பலி
முன்னதாக உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அசாம் அரசு தரப்பில் தலா ரூ. 5 லட்சம் நிவாரணமாக அறிவிக்கப்பட்டது.
884.9 கி.மீ. நீளம் கொண்ட அசாம்-மேகாலய எல்லைப் பகுதியில் 12 இடங்களில் எல்லை பங்கீடுத் தொடா்பாக பிரச்னை இருந்தது. இதில் 6 இடங்களின் பிரச்னை முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. கடந்த மாா்ச் மாதம் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா முன்னிலையில் இரு மாநிலங்களுக்கிடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமானது. மீதியுள்ள ஆறு இடங்களுக்கான பேச்சுவாா்த்தையும் தொடங்கப்பட்டுள்ளது. அஸ்ஸாம் மறுசீரைமப்புச் சட்டம்-1971க்கு மாறாக 1972-ஆம் ஆண்டு அசாமிலிருந்து பிரித்து மேகாலயம் உருவாக்கப்பட்டது. அதுவே, எல்லை பிரச்னைக்கான தொடக்கப்புள்ளியாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

ஹோர்மூஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்!

சாரங்கபாணி கோயில் தேரோட்டம்! வடம் இழுத்த பக்தர்கள்!

ஆந்திரம்: கலப்பட பால் குடித்து பலியானோர் எண்ணிக்கை 14ஆனது!
வீடியோக்கள்

Prof. K.M. Kader Mohideen Interview | இ.யூ.முஸ்லிம் லீக்கிற்கு 2 இடங்கள் போதுமா ? | IUML | DMK Alliance
தினமணி வீடியோ செய்தி...

Dinamani வார ராசிபலன்! | March 15 முதல் 21 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

Valaipechu Anthanan Interview | விஜய்யிடம் இப்போது மனமாற்றம்.. | TVK Vijay | Vijay Trisha issue
தினமணி வீடியோ செய்தி...

சட்டென்று மாறுது வானிலை பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

