காவல்நிலைய கிடங்குகளில் வைக்கப்பட்டிருக்கும் போதைப் பொருள்களை அழிக்க ஐந்து வழிகாட்டு நெறிமுறைகளை நீதிமன்றம் வழங்கியுள்ளது. அரசு தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் கூறுகையில், ஷேர்காஹ் மற்றும் நெடுஞ்சாலை காவல்நிலைய காவலர்கள் தரப்பில், கிடங்கில் வைக்கப்பட்டிருந்த 581 கிலோ கஞ்சாவை எலிகள் நாசம் செய்துவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளனர். அவற்றை காவலர்கள் கண்டுபிடிப்பதும் இயலாத காரியம், மேலும், கிடங்குப் பகுதியில் வைக்கப்பட்டிருக்கும் கஞ்சாவுக்கு பாதுகாப்பு அளிப்பதும் சிரமம். ஆனால், கஞ்சாவை எலிகள் சாப்பிட்டதாகக் கூறுவதை நிரூபிக்கும் ஆதாரங்களைத் தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டு, அடுத்த வழக்கு விசாரணையை நவம்பர் 26ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது என்றார்.