தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசுக்கு எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம்!தமிழகத்தில் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர், பேராசிரியர் கே. ராமசாமி, திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோர் பத்ம ஸ்ரீ பெற்றனர்.ஜூலை 1-ல் பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு!கல்வித்துறை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் வீ. காமகோடிக்கு பத்ம ஸ்ரீ விருதுதொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜா
/

நீதித்துறையில் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்க வேண்டும்: கிரண் ரிஜிஜூ

நீதித்துறையில் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்க வேண்டும் என மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.

News image
Updated On :26 நவம்பர் 2022, 8:28 pm IST

நீதித்துறையில் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்க வேண்டும் என மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.

உச்சநீதிமன்றத்தில் அரசியலமைப்பு நாள் இன்று (நவம்பர் 26) கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ கலந்து கொண்டனர். 

அப்போது சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ பேசியதாவது: கடந்த 70 ஆண்டுகளில் நீதித்துறையில் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரித்துள்ளது. ஆனால், இன்னும் போக வேண்டிய தூரம் அதிகம் உள்ளது. நீதித்துறையில் பெண்களின் பிரதிநிதித்துவம் மேலும் அதிகரிக்க வேண்டும். பெண்கள் மற்றும் குழந்தைகள் சம்பந்தப்பட்ட வழக்குகளை விசாரிக்க சிறப்பு விரைவு நீதிமன்றங்கள் ஏற்படுத்தப்படும். ஆனால், சில மாநிலங்கள் இந்த விஷயத்தில் மாற்றம் கொண்டுவர முன்வருதில்லை. கீழ் நீதிமன்றங்கள் அரசின் கவனத்தைப் பெற்றுள்ளது. தேங்கிக் கிடக்கும் வழக்குகள் விரைந்து முடிக்கப்பட வேண்டும். கீழ் நீதிமன்றங்களில் நிலுலையில் உள்ள வழக்குகள் 5 கோடியை நெருங்கி வருகிறது. சுதந்திரம் அடைந்த கடந்த 70 ஆண்டுகளாக பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நீதித்துறையில் பாலின சமத்துவத்தை கொண்டுவருவது அவசியம் என்றார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.