சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

நீதித்துறையில் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்க வேண்டும்: கிரண் ரிஜிஜூ

நீதித்துறையில் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்க வேண்டும் என மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.

News image
Updated On :26 நவம்பர் 2022, 2:58 pm

DIN

நீதித்துறையில் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்க வேண்டும் என மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.

உச்சநீதிமன்றத்தில் அரசியலமைப்பு நாள் இன்று (நவம்பர் 26) கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ கலந்து கொண்டனர். 

அப்போது சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ பேசியதாவது: கடந்த 70 ஆண்டுகளில் நீதித்துறையில் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரித்துள்ளது. ஆனால், இன்னும் போக வேண்டிய தூரம் அதிகம் உள்ளது. நீதித்துறையில் பெண்களின் பிரதிநிதித்துவம் மேலும் அதிகரிக்க வேண்டும். பெண்கள் மற்றும் குழந்தைகள் சம்பந்தப்பட்ட வழக்குகளை விசாரிக்க சிறப்பு விரைவு நீதிமன்றங்கள் ஏற்படுத்தப்படும். ஆனால், சில மாநிலங்கள் இந்த விஷயத்தில் மாற்றம் கொண்டுவர முன்வருதில்லை. கீழ் நீதிமன்றங்கள் அரசின் கவனத்தைப் பெற்றுள்ளது. தேங்கிக் கிடக்கும் வழக்குகள் விரைந்து முடிக்கப்பட வேண்டும். கீழ் நீதிமன்றங்களில் நிலுலையில் உள்ள வழக்குகள் 5 கோடியை நெருங்கி வருகிறது. சுதந்திரம் அடைந்த கடந்த 70 ஆண்டுகளாக பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நீதித்துறையில் பாலின சமத்துவத்தை கொண்டுவருவது அவசியம் என்றார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.