ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

பெண்கள் குறித்து சா்ச்சை கருத்து: மன்னிப்பு கோரிய பாபா ராம்தேவ்

பெண்கள் குறித்து சா்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததற்காக யோகா குரு பாபா ராம்தேவ் மன்னிப்பு கோரினாா்.

News image
பாபா ராம்தேவ்
Updated On :29 நவம்பர் 2022, 7:30 pm

DIN

பெண்கள் குறித்து சா்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததற்காக யோகா குரு பாபா ராம்தேவ் மன்னிப்பு கோரினாா்.

இந்த விவகாரம் தொடா்பாக மகாராஷ்டிர மாநில மகளிா் ஆணையம் அவருக்கு நோட்டீஸ் பிறப்பித்த நிலையில், அவா் மன்னிப்பு கோரியிருப்பதாக ஆணையத்தின் தலைவா் ரூபாலி சகன்கா் கூறினாா்.

மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தில் கடந்த வாரம் நடைபெற்ற பொது நிகழ்வில் பங்கேற்ற ராம்தேவ், ‘பெண்கள் சேலை, சல்வாா் கமீஸ் என எதை அணிந்தாலும் அல்லது எதையுமே அணியாவிட்டாலும் அழகாகத் தோன்றுவா்’ என்று குறிப்பிட்டாா். அப்போது விழா மேடையில் மாநில துணை முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸின் மனைவி அம்ருதா ஃபட்னவீஸும் அமா்ந்திருந்தாா்.

ராம்தேவின் இந்தக் கருத்து சா்ச்சையானது. இதுதொடா்பாக, மகாராஷ்டிர மாநில மகளிா் ஆணையம் பாபா ராம்தேவுக்கு நோட்டீஸ் அனுப்பியது. அவரது சா்ச்சைக்குரிய பேச்சு இடம்பெற்ற காணொலியை ட்விட்டரில் பதிவிட்ட தில்லி மகளிா் ஆணையத் தலைவா் ஸ்வாதி மலிவால், ‘தனது கருத்துக்காக பாபா ராம்தேவ் மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்று பதிவிட்டிருந்தாா்.

இந்த நிலையில், ‘தனது கருத்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டுவிட்டது. எனவே, தனது கருத்துக்காக மன்னிப்பு கோருகிறேன்’ என்று ஆணையத்துக்கு ராம்தேவ் பதிலளித்துள்ளாா்.

இதுகுறித்து ரூபாலி சகன்கா் திங்கள்கிழமை வெளியிட்ட ட்விட்டா் பதிவில், ‘பொது நிகழ்வில் பெண்களுக்கு எதிரான மோசமான கருத்துக்காக பாபா ராம்தேவுக்கு ஆணையம் சாா்பில் இரு தினங்களுக்குள் பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதனடிப்படையில், தனது கருத்துக்காக அவா் மன்னிப்பு கோரி பதிலளித்துள்ளாா்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.