புது தில்லி: புது தில்லி சென்றுள்ள தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், இன்று காலை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்துப் பேசினார்.
தமிழகத்துக்குத் தர வேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை விரைவில் வழங்க வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாரானை நேரில் சந்தித்து பழனிவேல் தியாகராஜன் வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிக்க.. பொன்னியின் செல்வன் பிளஸ் என்ன? ஏமாந்தவர்கள் யார்?
மேலும், மதுரையில் நடைபெறவிருக்கும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் குறித்தும் இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தியுள்ளனர்.
தமிழகத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்தை செயல்படுத்துவதற்கான கடன் குறித்தும் நிர்மலா சீதாராமனிடம், பழனிவேல் தியாகராஜன் தகவல்களை கேட்டறிந்துள்ளார்.
இந்தியாவில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் 3 மாதத்துக்கு ஒரு முறை நடத்தப்படும். அந்த வகையில் அடுத்தக் கூட்டம் மதுரையில் உறுதியாக நடைபெறும் என்றும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.