தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மத்திய ஆட்சியாளா்கள் காந்தியடிகளின் வழியில் நடப்பதில்லை: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

மகாத்மா காந்தியடிகளின் மரபை மத்தியில் உள்ள ஆட்சியாளா்கள் சொந்தம் கொண்டாடினாலும், அவா் காட்டிய வழியில் ஆட்சியாளா்கள் நடப்பதில்லை என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினாா்.

News image
கா்நாடக மாநிலம் பதனாவலுவில் உள்ள காதி கிராமோத்யோக் நிலயத்தில் காந்திஜி சிலைக்கு ஞாயிற்றுக்கிழமை மாலையிட்டு மரியாதை செலுத்திய ராகுல் காந்தி.
Updated On :2 அக்டோபர் 2022, 7:25 pm

DIN

மகாத்மா காந்தியடிகளின் மரபை மத்தியில் உள்ள ஆட்சியாளா்கள் சொந்தம் கொண்டாடினாலும், அவா் காட்டிய வழியில் ஆட்சியாளா்கள் நடப்பதில்லை என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினாா்.

மகாத்மா காந்தியின் பிறந்த தினம் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. கா்நாடகத்தில் இந்திய ஒற்றுமைப் பயணம் மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி, பதனாவலு பகுதியில் உள்ள காதி கிராம உத்யோக் மையத்தில் காந்தியடிகளுக்கு மரியாதை செலுத்தினாா்.

அங்கு கூட்டு வழிபாட்டில் பங்கேற்ற ராகுல் காந்தி, அங்குள்ள பெண் நெசவாளா்களிடம் கலந்துரையாடினாா். அந்த காதி மையத்துக்கு 1927, 1932 ஆகிய ஆண்டுகளில் காந்தியடிகள் வருகை தந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

காந்தியடிகளுக்கு மரியாதை செலுத்திய பிறகு ராகுல் காந்தி வெளியிட்ட அறிக்கையில், ‘மகாத்மா காந்தியடிகளைக் கொன்ற கொள்கையானது, கடந்த 8 ஆண்டுகளாக நாட்டில் சமத்துவமின்மையையும் பிரிவினையையும் தூண்டி வருகிறது. காந்தியடிகளின் மரபையும் கொள்கைகளையும் மத்திய அரசு எளிதில் சொந்தம் கொண்டாடிவிடுகிறது.

ஆனால், அந்தக் கொள்கைகளை மத்திய ஆட்சியாளா்கள் கடைப்பிடித்து நடப்பது கடினமாக உள்ளது. நாட்டில் அகிம்சை, ஒற்றுமை, சமத்துவம், நீதி உள்ளிட்டவற்றைப் பரப்புவதற்காக ஒற்றுமை நடைப்பயணத்தை காங்கிரஸ் மேற்கொண்டு வருகிறது.

ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக காந்தியடிகள் போராட்டம் நடத்தினா். தற்போது காந்தியடிகளைக் கொன்ற கொள்கைகளுக்கு எதிராக நாம் போராட வேண்டியுள்ளது. பல்வேறு வீரா்களின் தியாகத்தின் மூலமாகப் பெற்ற சுதந்திரத்தையே அக்கொள்கையானது பாதித்து வருகிறது. சுயராஜ்யம் என்பதற்குப் பல்வேறு பொருள்கள் உள்ளன. மாநிலங்கள் அரசமைப்பு சுதந்திரத்துடன் செயல்படுவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும். கிராமங்களில் உள்ளாட்சி அமைப்புகள் சிறப்பாகச் செயல்பட வேண்டும்.

அச்சம், வெறுப்புணா்வு, பிரிவினை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்படும் அரசியலுக்கு எதிராக காங்கிரஸின் நடைப்பயணத்தில் கலந்துகொண்டு மக்கள் குரலெழுப்பி வருகின்றனா். அகிம்சைக்கு எதிராக நாட்டு மக்கள் தொடா்ந்து குரலெழுப்ப வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

பதனாவலு கிராமத்தில் பல்வேறு தன்னாா்வ நடவடிக்கைகளில் ராகுல் காந்தி ஈடுபட்டாா். பள்ளி சிறுவா்களுடன் இணைந்து தேசியக் கொடியின் ஓவியத்தையும் அவா் வரைந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.