காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ராகுல் காந்தியின் ஒற்றுமைப் பயணத்தில் கருப்புக் கொடி காட்ட பாஜக திட்டம்? காங்கிரஸ் குற்றச்சாட்டு

கர்நாடகத்தில் ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரையின்போது பாஜக கருப்புக் கொடி காட்ட திட்டமிட்டுள்ளதாக கர்நாடக காங்கிரஸ் சார்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 

News image
Updated On :2 அக்டோபர் 2022, 1:01 pm

DIN

கர்நாடகத்தில் ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரையின்போது பாஜக கருப்புக் கொடி காட்ட திட்டமிட்டுள்ளதாக கர்நாடக காங்கிரஸ் சார்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இது குறித்து பத்திரிக்கையாளர்களிடம் பேசிய மாநில காங்கிரஸ் தலைவர் சிவக்குமார் கூறியதாவது: “ பாஜக தலைவர்கள் அதன் கட்சி உறுப்பினர்களிடம் கருப்புக் கொடியினை விநியோகித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் மைசூர் நடைப்பயணத்தின்போது காட்ட திட்டமிட்டுள்ளதாக எனக்குத் தெரிய வந்தது. இது குறித்து மாநிலக் காவல் ஆணையரிடம் நான் பேசியுள்ளேன். கருப்புக் கொடி காட்டுவது, கற்களை வீசுவது மற்றும் முட்டைகளை வீசுவது போன்ற செயல்களால் எங்களை அச்சுறுத்த முடியாது. அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யட்டும். அதற்கான முடிவுகள் எதிர்காலத்தில் அவர்களுக்குத் தெரியும். காங்கிரஸின் நடைப்பயணம் குறித்து பாஜக அச்சத்தில் உள்ளது.” என்றார்.

தமிழகத்தின் கன்னியாகுமரியில் இருந்து  தொடங்கப்பட்ட ஒற்றுமை நடைப்பயணம் கேரளத்தில் தொடர்ந்தது. தற்போது இந்த நடைப்பயணம் கர்நாடக மாநிலத்தில் தொடர்ந்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.