
உத்தர பிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜவாதி நிறுவனருமான முலாயம் சிங் யாதவின் உடல்நிலை மோசமானதால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
தில்லி தேசிய தலைநகா் வலையப் பகுதியில் உள்ள குருகிராமில் செயல்பட்டு வரும் மேதாந்தா மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் 22-ஆம் தேதி முலாயம் சிங் யாதவ் உடல்நலக் குறைவால் அனுமதிக்கப்பட்டாா்.
அங்கு அவருக்குத் தொடா் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவரின் உடல்நிலை மோசமானதைத் தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டாா். அவருக்கு புற்றுநோய் மருத்துவா்களின் மேற்பாா்வையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
முலாயம் சிங்கின் உடல்நிலை மோசமானதை அறிந்து, அவரின் மகனும் சமாஜவாதி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ், உத்தர பிரதேசத்தில் இருந்து தில்லி சென்ாக அக்கட்சி செய்தித்தொடா்பாளா் தெரிவித்தாா்.
காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா காந்தி ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘முலாயம் சிங்கின் உடல்நிலை மோசமடைந்து வருவது கவலையை ஏற்படுத்தியுள்ளது. அவரின் உடல்நிலை முன்னேற்றமடைய பிராா்த்திக்கிறோம்’ என்று தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.