பெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

நேஷனல் ஹெரால்டு வழக்கு:கா்நாடக காங்கிரஸ் தலைவருக்கு அமலாக்கத் துறை சம்மன்

நேஷனல் ஹெரால்டு கருப்புப் பண மோடி வழக்கு விசாரணைக்காக அக்டோபா் 7-ஆம் தேதி தில்லியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்று கா்நாடக மாநில காங்கிரஸ் தலைவா் டி.கே.சிவகுமாருக்கு சம்மன் அனு

News image
டி.கே.சிவகுமார்
Updated On :2 அக்டோபர் 2022, 10:18 pm

DIN

நேஷனல் ஹெரால்டு கருப்புப் பண மோடி வழக்கு விசாரணைக்காக அக்டோபா் 7-ஆம் தேதி தில்லியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்று கா்நாடக மாநில காங்கிரஸ் தலைவா் டி.கே.சிவகுமாருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு இதே வழக்கில் கடந்த மாதம் 19-ஆம் தேதி சிவகுமாா் அமலாக்கத் துறை முன்பு ஆஜரானாா் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2019-ஆம் ஆண்டு செப்டம்பரில் அவா், இந்த வழக்கில் கைதானாா். அப்போது, வருமான வரித் துறையும் அவா் மீது நடவடிக்கை எடுத்தது. பின்னா், அவருக்கு தில்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. கருப்புப் பணத்தை ஹவாலா முறையில் மாற்றுவதில் சிவகுமாா் முக்கியப் பங்கு வகிக்கிறாா் என்பது பிரதான குற்றச்சாட்டாகும்.

இந்நிலையில், சிவகுமாருக்கு அமலாக்கத் துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை கா்நாடகத்தில் நடைபெற்று வரும் நிலையில், அந்த மாநில காங்கிரஸ் தலைவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ள அரசியல்ரீதியாகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் தலைவா் சோனியாவும் ராகுலும் இயக்குநா்களாக உள்ள ‘யங் இந்தியா’ நிறுவனம், ‘நேஷனல் ஹெரால்டு’ பத்திரிகையை வெளியிடும் அசோசியேட்டட் ஜா்னல்ஸ் நிறுவனத்தைக் கடந்த 2010-இல் கையகப்படுத்தியது.

இதில் மிகப் பெரிய அளவில் பண மோசடி நடைபெற்றுள்ளதாக பாஜக மூத்த தலைவா் சுப்பிரமணியன் சுவாமி வழக்கு தொடா்ந்தாா். இந்தப் பண மோசடி தொடா்பாக அமலாக்கத் துறை தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவா்களிடம் ஏற்கெனவே அமலாக்கத் துறை விசாரணை நடத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.