காந்தி ஜெயந்தியில் 1.07 லட்சம் குடிநீர் இணைப்பு: உத்தரப் பிரதேசம் சாதனை

காந்தி ஜெயந்தி நாளன்று 1.07 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக உத்தரப் பிரதேச அரசு தெரிவித்துள்ளது. 
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on
Updated on
1 min read


காந்தி ஜெயந்தி நாளன்று 1.07 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக உத்தரப் பிரதேச அரசு தெரிவித்துள்ளது. 

மகாத்மா காந்தியடிகள் மற்றும் முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி ஆகியோரின் பிறந்தநாளையொட்டி கிராமப்புறங்களில் இந்த மைல்கல் சாதனையை செய்துள்ளதாக உத்தரப் பிரதேச அரசு தெரிவித்துள்ளது. 

கடந்த 20 நாள்களில் மட்டும் 2 சாதனைகளை உத்தரப் பிரதேச மாநில யோகி ஆதித்யநாத் அரசு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.    

பல மாவட்டங்களில் உள்ள கிராமப் புறங்களில் குடிநீர் இணைப்பு குழாய் மூலம் சாத்தியப்படுத்தப்பட்டுள்ளது. ராஜஸ்தான், மேற்கு வங்கம், ஆந்திரம், சத்தீஸ்கர், மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்களில் கூட ஒரு நாளுக்கு 10 ஆயிரம் என்ற இலக்கை எட்டமுடியவில்லை எனவும் உத்தரப் பிரதேச அரசு தெரிவித்துள்ளது. 

செப்டம்பர் 17ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாளன்று 1.21 லட்சம் குடிநீர் இணைப்புகள் வழங்கி சாதனை புரிந்துள்ளதாகவும் உத்தரப் பிரதேச அரசு சுட்டிக்காட்டியுள்ளது. 

எனினும் காந்தி ஜெயந்தி நாளன்று 1.34 லட்சம் குடிநீர் இணைப்புகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. எனினும் அந்த இலக்கு 1.07 லட்சம் என்ற எண்ணிக்கையுடன் முடிவடைந்ததாகவும் குறிப்பிட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com