ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

தில்லியில் அதிகரிக்கும் டெங்கு! ஒரு வாரத்தில் 400 பேர் பாதிப்பு

தலைநகரான தில்லியில் டெங்குவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 937ஆக அதிகரித்துள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :3 அக்டோபர் 2022, 12:21 pm

DIN


தில்லியில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 412 பேருக்கு டெங்கு கண்டறியப்பட்டுள்ளது.

தலைநகரில் டெங்கு காய்ச்சலால் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 937ஆக அதிகரித்துள்ளது. இதனால் தடுப்பு நடவடிக்கைகளை சுகாதாரத் துறை தீவிரப்படுத்தியுள்ளது. 

தலைநகரில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் கனமழையால் டெங்கு காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. கடந்த மாதத்தின் நான்காவது வாரம் வரை 525 பேருக்கு மட்டுமே டெங்கு பாதிப்பு இருந்தது. 

ஆனால், தற்போது கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 412 பேருக்கு டெங்கு காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளதாக தில்லி சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதனால் கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் டெங்குவால் 693 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

தற்போது தலைநகரான தில்லியில் டெங்குவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 937ஆக அதிகரித்துள்ளது. எனினும் டெங்கு காய்ச்சலால் உயிரிழப்புகள் ஏதும் நிகழவில்லை என்றும், டெங்குவை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை சுகாதாரத் துறை மேற்கொண்டுள்ளதாகவும் தில்லி அரசு தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.