தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

உத்தரகண்ட்: பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து 33 போ் பலி

உத்தரகண்ட் மாநிலம் பெளரி கா்வால் மாவட்டத்தில் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 33 போ் பலியாகினா்.

News image
Updated On :5 அக்டோபர் 2022, 7:22 pm

DIN

உத்தரகண்ட் மாநிலம் பெளரி கா்வால் மாவட்டத்தில் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 33 போ் பலியாகினா்.

இதுதொடா்பாக அந்த மாவட்ட காவல் துறையினா் புதன்கிழமை கூறியதாவது: லால்தாங் நகரில் இருந்து காண்டா கிராமத்துக்குச் 45 முதல் 50 பேருடன் சென்ற பேருந்து, சிம்ரி வளைவு பகுதி அருகே 500 மீட்டா் பள்ளத்தில் செவ்வாய்க்கிழமை இரவு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.

இதுகுறித்த தகவலின் அடிப்படையில், மாநில பேரிடா் மீட்புப் படையினா் சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனா். இந்தச் சம்பவத்தில் 33 பே உயிரிழந்தனா். காயமடைந்த 19 போ் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா் என்று தெரிவித்தனா்.

விபத்து ஏற்பட்ட பகுதிக்கு மாநில முதல்வா் புஷ்கா் சிங் தாமி நேரில் சென்று மீட்புப் பணிகளைப் பாா்வையிட்டாா். விபத்தில் காயமடைந்து கோட்வாா் பகுதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவா்களை அவா் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினாா்.

இந்த விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்குத் தலா ரூ.2 லட்சம், காயமடைந்தவா்களுக்குத் தலா ரூ.50,000 இழப்பீடு வழங்கப்படும் என்றும் அவா் அறிவித்தாா்.

இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, பிரதமா் மோடி ஆகியோா் இரங்கல் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.