போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

ஹிமாச்சலில் எய்ம்ஸ் மருத்துவமனையை திறந்துவைத்தார் பிரதமர் மோடி!

ஹிமாச்சல் மாநிலம் பிலாஸ்பூரில் கட்டப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்துவைத்தார். 

News image
Updated On :5 அக்டோபர் 2022, 6:31 am

DIN

ஹிமாச்சல் மாநிலம் பிலாஸ்பூரில் கட்டப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்துவைத்தார். 

இவ்விழாவில் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், ஹிமாச்சல் முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர். 

பிலாஸ்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கடந்த 2017ல் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இதையடுத்து பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில் இன்று திறக்கப்பட்டுள்ளது. 

247 ஏக்கர் பரப்பளவில் ரூ. 1,470 கோடிக்கும் அதிகமான செலவில் 18 சிறப்புப் பிரிவுகள், 17 சூப்பர் ஸ்பெஷாலிட்டி பிரிவுகள், 18 சிறப்பு ஆபரேஷன் தியேட்டர்கள், 750 படுக்கைகள், 64 ஐசியு படுக்கைகளுடன் கூடிய அதிநவீன மருத்துவமனையாக இது உருவாக்கப்பட்டுள்ளது. 

எய்ம்ஸ் மருத்துவமனையை திறந்துவைத்துள்ள பிரதமர் மோடி, ரூ.3,650 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டி விழாவில் உரையாற்றுகிறார்.

மேலும், குலு பகுதியில் தசரா கொண்டாட்டங்களிலும் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.