சமாஜவாதி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவின் (82) உடல்நிலை தொடா்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமாஜ்வாதி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஆகஸ்ட் 22ஆம் தேதியிலிருந்து தில்லி குருகிராமில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறாா்.
இதையும் படிக்க | அமைதிக்கான நோபல் பரிசு: இந்தியப் பத்திரிகையாளர்களுக்கு வாய்ப்பு
அவருக்கு மருத்துவமனையின் சிறப்பு மருத்துவக்குழு தொடர்ந்து சிகிச்சையளித்து வருகிறது. இந்நிலையில் அவரது உடல்நிலை குறித்து வியாழக்கிழமை மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், ‘முலாயம் சிங் யாதவிற்கு உயிா் காக்கும் மருந்துகள் அளிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றன’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.