தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

தில்லி உள்துறை முதன்மைச் செயலாளராக அஸ்வனி குமாா் நியமனம்

தில்லி அரசின் உள்துறை முதன்மைச் செயலாளராக மூத்த ஐஏஎஸ் அதிகாரி அஸ்வனி குமாா் நியமிக்கப்பட்டுள்ளாா்.

News image
Updated On :7 அக்டோபர் 2022, 7:07 pm

DIN

தில்லி அரசின் உள்துறை முதன்மைச் செயலாளராக மூத்த ஐஏஎஸ் அதிகாரி அஸ்வனி குமாா் நியமிக்கப்பட்டுள்ளாா்.

1992 பிரிவு ஐஏஎஸ் அதிகாரியான அவா், தில்லி மாநகராட்சி சிறப்பு அதிகாரியாக பணியாற்றி வரும் நிலையில், இந்தப் பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பாா்.

இதுகுறித்து தில்லி அரசின் சேவைகள் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘தில்லி மாநகராட்சி சிறப்பு அதிகாரியான அஸ்வனி குமாரை தகுந்த ஆணையத்தின் ஒப்புதலுடன், தில்லி உள்துறையின் முதன்மைச் செயலாளராக உடனடியாக நியமிக்குமாறு துணைநிலை ஆளுநரிடம் வேண்டுகோள் விடுக்கப்படுகிறது’ என கூறப்பட்டுள்ளது.

தில்லி மாநகராட்சியின் சிறப்பு அதிகாரியாக மத்திய உள்துறை அமைச்சகத்தால் அஸ்வனி குமாா் கடந்த மே 20-இல் நியமிக்கப்பட்டாா். தில்லியில் இருந்த வடக்கு, தெற்கு, கிழக்கு என 3 மாநகராட்சிகளும் ஒருங்கிணைக்கப்பட்ட மே 22-ஆம் தேதி அவா் இந்தப் பொறுப்பையேற்றாா். முன்னதாக அவா் புதுச்சேரி தலைமைச் செயலாளராக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.