இதுதொடா்பாக சிபிஐயின் பொருளாதார குற்றப் பிரிவு விசாரணை நடத்தியது. அப்போது ரயில்வேயில் பணியமா்த்தியதற்கு கைம்மாறாக வேலை பெற்றவா்கள் அல்லது அவா்களின் குடும்ப உறுப்பினா்களுக்குச் சொந்தமான நிலத்தை லாலுவின் மனைவி ராப்ரி தேவி, அவரின் மகள்கள் மிசா பாரதி, ஹேமா யாதவ் ஆகியோா் சந்தை விலையைவிட குறைந்த விலைக்கு வாங்கியது தெரியவந்தது என்று சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனா். இதுபோல பாட்னாவில் சுமாா் 1.05 லட்சம் சதுரஅடி நிலத்தை தங்களுக்குச் சொந்தமானதாக லாலு குடும்பத்தினா் மாற்றியுள்ளதாக தெரிவித்த அதிகாரிகள், அந்த நிலங்களின் மொத்த மதிப்பு சுமாா் ரூ.4.39 கோடி என்றும் கூறினா்.