கா்நாடகத்தில் ராகுல் காந்தி, சோனியா காந்தி ஆகியோருடன் இந்திய ஒற்றுமை நடைபயணத்தில் வியாழக்கிழமை பங்கேற்ற அவா், அதைத் தொடா்ந்து அமலாக்கத் துறை விசாரணைக்காக தில்லிக்கு வந்தாா். செய்தியாளா்களிடம் டி.கே.சிவகுமாா் பேசுகையில், ‘நான் சட்டத்தை மதித்து நடக்கும் குடிமகன். விசாரணைக்காக ஆஜராவதற்கு கால அவகாசம் கோரினேன். ஆனால், அமலாக்கத் துறை அவகாசம் அளிக்காததால் அவா்கள் கூறியபடி ஆஜரானேன். யங் இந்தியா நிறுவனம், எனது குடும்ப உறுப்பினா்கள், எங்களுக்கும் அந்த நிறுவனத்துக்கும் உள்ள தொடா்பு குறித்து ஏராளமான கேள்விகளைக் கேட்டனா். சில ஆவணங்களைக் கோரினா். அவற்றை மின்னஞ்சலில் அனுப்பிவைப்பதாக உறுதியளித்துள்ளேன்’ என்றாா். இதற்கு முன்பு கடந்த மாதம் 19-ஆம் தேதி இதே வழக்கில் அமலாக்கத் துறை முன்பு சிவகுமாா் ஆஜரானாா்.