இது தொடா்பான விவகாரத்தை விசாரித்த தலைமை நீதிபதி சதீஷ் சந்திர சா்மா தலைமையிலான நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் அடங்கிய அமா்வு பிறப்பித்த உத்தரவில் தெரிவித்திருப்பதாவது: சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்குப் பிறகும், ஏழை மக்கள் கையால் துப்புரவு செய்யும் தொழிலாளியாகப் பணிபுரியும் கட்டாயத்தில் இருப்பதும், இந்த விவகாரத்தில் உள்ள சட்டங்கள் பின்பற்றப்படாமல் இருப்பதும் துரதிருஷ்டவசமானது. உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பைக் கருத்தில் கொண்டு, இழப்பீடு வழங்குவதற்கு டிடிஏ தீா்மானிக்க முகாந்திரம் இருப்பதால், இறந்த இருவரின் குடும்பத்திற்கும் தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.