அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

'பிரசாந்த் கிஷோர் சொன்னது பொய்' - நிதீஷ் குமார் காட்டம்!

ஐக்கிய ஜனதா தளக் கட்சியில் பதவி குறித்து பிரசாந்த் கிஷோர் சொன்னது பொய் என்று பிகார் முதல்வர் நிதீஷ் குமார் தெரிவித்துள்ளார். 

News image
Updated On :8 அக்டோபர் 2022, 8:18 am

DIN

ஐக்கிய ஜனதா தளக் கட்சியில் பதவி குறித்து பிரசாந்த் கிஷோர் சொன்னது பொய் என்று பிகார் முதல்வர் நிதீஷ் குமார் தெரிவித்துள்ளார். 

தோ்தல் உத்தி வகுப்பாளரான பிரசாந்த் கிஷோா் தற்போது பிகார் மாநிலத்தில் மக்களை சந்திக்க நடைப்பயணம் மேற்கொண்டுள்ளார். 

சில தினங்களுக்கு முன்பு அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் ஐக்கிய ஜனதா தளக் கட்சியை விமர்சித்த அவர், அந்த கட்சியை வழிநடத்துமாறு நிதீஷ் குமார் கேட்டதாகவும் அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டதாகவும் கூறினார். இது அரசியலில் சற்று சலசலப்பை ஏற்படுத்தியது. 

இந்நிலையில் இதுகுறித்து பதில் அளித்துள்ள நிதீஷ் குமார், 'கட்சியில் பதவி வழங்கியதாக, கட்சியை வழிநடத்தக் கேட்டதாக பிரசாந்த் கிஷோர் கூறியது பொய், அவர் என்ன வேண்டுமானாலும் பேசட்டும், எங்களுக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

4-5 ஆண்டுகளுக்கு முன்பு அவர் என்னை காங்கிரஸுடன் இணையச் சொன்னார். ஆனால், அவர் பாஜகவுடன் கைகோர்த்து செயல்படுகிறார்' என்று தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.