விமானப்படை நாள்...  இந்திய விமானப்படை வீரர்களுக்கு பிரதமர் வாழ்த்து!

விமானப்படை நாளையொட்டி இந்திய விமானப்படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
விமானப்படை நாள்...  இந்திய விமானப்படை வீரர்களுக்கு பிரதமர் வாழ்த்து!

விமானப்படை நாளையொட்டி இந்திய விமானப்படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் அக்டோர்பர் 8ஆம் தேதி இந்திய விமானப்படை நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, 90 ஆவது இந்திய விமானப்படை நாள் சனிக்கிழமை கொண்டாடப்படுகிறது. 

இதையடுத்து இந்திய விமானப்படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திரமோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் தனது ட்விட்டரில் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், 

"விமானப்படை நாளில், துணிச்சலான விமானப்படை வீரர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் எனது வாழ்த்துகள். வானம் பிரகாசமாக உள்ளது என்ற முழக்கத்தின்படி, இந்திய விமானப்படை பல தசாப்தங்களாக தனிச்சிறப்பு வாய்ந்த திறமையை வெளிப்படுத்தி வருகின்றது. ஆபத்து காலங்களில் அவர்கள் தேசத்தைப் பாதுகாத்து, குறிப்பிடத்தக்க மனித உணர்வையும், பேரழிவுகளின் போது குறிப்பிடத்தக்க பணிகளைக் வெளிப்படுத்தியுள்ளனர் என பதிவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com