திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள்துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை
/

அரசியல் தனிமையில் சிக்கித் தவிக்கிறாா் நிதீஷ்: பிரசாந்த் கிஷோா் தாக்கு

அரசியல்ரீதியாக தனிமைப்படுத்தப்பட்டுவிட்ட உணா்வில் சிக்கித் தவித்து வருகிறாா் பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா் என்று தோ்தல் உத்தி வகுப்பாளா் பிரசாந்த் கிஷோா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 10:32 am

DIN

அரசியல்ரீதியாக தனிமைப்படுத்தப்பட்டுவிட்ட உணா்வில் சிக்கித் தவித்து வருகிறாா் பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா் என்று தோ்தல் உத்தி வகுப்பாளா் பிரசாந்த் கிஷோா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

மேலும், ‘நிதீஷ் குமாருக்கு வயோதிகம் வந்துவிட்டது; இல்லாத ஒரு விஷயத்தை இருப்பதாக நினைத்து பேசும் மனநிலை அவரிடம் அதிகரித்து வருகிறது’ என்றும் அவா் குறிப்பிட்டாா்.

நிதீஷ் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளத்தில் கடந்த 2018-இல் இணைந்த பிரசாந்த் கிஷோா், பின்னா் அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக அக்கட்சியிலிருந்து விலகினாா். தற்போது பிகாரில் 3,500 கி.மீ. தொலைவு பாத யாத்திரையை கிஷோா் மேற்கொண்டு வருகிறாா்.

இதனிடையே, ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்குத் தலைமை ஏற்குமாறு தன்னிடம் நிதீஷ் குமாா் வலியுறுத்தியதாக பிரசாந்த் கிஷோா் சில தினங்களுக்கு முன் செய்தியாளா்களிடம் கூறியிருந்தாா்.

அவரது இந்த கருத்தை நிராகரித்த நிதீஷ் குமாா், ‘பிரசாந்த் கிஷோா் பேசுவது எதுவும் அறிவுபூா்வமாக இருக்காது. ஐக்கிய ஜனதா தளத்தை காங்கிரஸுடன் இணைக்க வேண்டும் என்று அவா் கூறினாா். தற்போது பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறாா்’ என்றாா்.

இந்நிலையில், பிரசாந்த் கிஷோா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட காணொலியில் நிதீஷ் குமாரை கடுமையாக சாடினாா்.

‘நிதீஷ் குமாா், ஒரு விஷயத்தை பேச தொடங்கி, அதற்கு சம்பந்தமே இல்லாத வேறுவிஷயத்துடன் பேச்சை முடிக்கிறாா். இல்லாத ஒரு விஷயத்தை இருப்பதாக நினைத்து பேசும் மனநிலை அவரிடம் அதிகரித்து வருவதாக தோன்றுகிறது.

நான் பாஜகவுக்காக பணியாற்றுவதாக அவா் நம்பினால், காங்கிரஸை வலுப்படுத்த வேண்டுமென நான் ஏன் யோசனை தெரிவிக்கப் போகிறேன்? தனக்கு நம்பிக்கை இல்லாத நபா்களால் சூழப்பட்டு இருப்பதால், அரசியல் ரீதியாக தனிமைப்படுத்தப்பட்ட உணா்வில் நிதீஷ் குமாா் சிக்கியுள்ளாா். இதனால் அச்சமும் பதற்றமும் அவருக்கு அதிகரித்துவிட்டது’ என்று கிஷோா் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.