மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தில்லியில் சமூகநலத்துறை அமைச்சர் ராஜேந்திரபால் கௌதம் ராஜிநாமா!

தில்லியில் சமூகநலத்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் ராஜேந்திரபால் கௌதம் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

News image
Updated On :10 அக்டோபர் 2022, 8:43 am

DIN


தில்லியில் சமூகநலத்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் ராஜேந்திரபால் கௌதம் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

தில்லியில் தசரா நாளான அக்டோபர் 5 அன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆம் ஆத்மி தலைவரும் தில்லியின் சமூகநலத்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சருமான கெளதம் கலந்துகொண்டு பேசுகையில் இந்து கடவுள்களையும், மத மாற்றம் தொடர்பான சர்ச்சைக்குரிய விதத்தில் பேசியுள்ளார். இது குறித்து விடியோ பதிவு சமூக ஊடகங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

இந்து கடவுள்களையும், மத மாற்றம் தொடர்பான சர்ச்சைக்குரிய விதத்தில் பேசிய அமைச்சர் ராஜேந்திரபால் கௌதமை கடுமையாக விமர்சித்த பாஜக, முதல்வர் கேஜரிவால் அவரை அமைச்சரவையில் இருந்து ராஜிநாமா செய்ய வலியுறுத்த வேண்டும் என்று கோரியது. 

மேலும், கௌதம் பேச்சு இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்துவதாகவும், நாட்டில் வகுப்புவாத கலவரத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் பாஜக குற்றம்சாட்டியது. 

இருப்பினும், சர்ச்சையைத் தொடர்ந்து, கெளதம் ஒரு விளக்கத்தை வெளியிட்டார், அதில்,  தனிப்பட்ட முறையில் அனைத்து தெய்வங்களையும் நான் மதிக்கிறேன் என்றும், மத மாற்றம் தொடர்பான அவமதிக்கும் வகையில் பேசுவதற்கு தான் கனவில் கூட நினைத்ததில்லை என்றும் கூறியிருந்தார்.

இந்நிலையில், தில்லியில் சமூகநலத்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் ராஜேந்திரபால் கௌதம் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

இந்து கடவுள்களையும், மத மாற்றம் தொடர்பான சர்ச்சைக்குரிய விதத்தில் தான் பேசியதாக சமூக ஊடகங்களில் விடியோ வைரலாகி வருவதை அடுத்து அவர் தனது அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.