தில்லியில் 66 ஆண்டுகள் இல்லாத அளவு மழைப்பொழிவு பதிவு

தில்லியில் நடப்பு அக்டோபர் மாதம் 66 ஆண்டுகள் இல்லாத அளவு மழை பொழிந்துள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. 
தில்லியில் 66 ஆண்டுகள் இல்லாத அளவு மழைப்பொழிவு பதிவு
Published on
Updated on
1 min read

தில்லியில் நடப்பு அக்டோபர் மாதம் 66 ஆண்டுகள் இல்லாத அளவு மழை பொழிந்துள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.  

தில்லி உள்ளிட்ட வடக்கு மாநிலங்கள் கடந்த சில தினங்களாக நல்ல மழையைப் பெற்றுள்ளன. தில்லியில் நடப்பு அக்டோபர் மாதம் மட்டும் 128.2 மி.மீ. மழை பொழிந்துள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

இது கடந்த 66 ஆண்டுகள் இல்லாத அளவு பதிவான ஒன்றாகும். கடந்த 1954ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அதிகபட்சமாக 238.2 மி.மீ. மழை பொழிந்திருந்தது. 

இதன்மூலம் நான்காவது அதிகபட்ச மழைப்பொழிவை நடப்பு அக்டோபர் மாதம் பெற்றுள்ளது. தில்லியில் கடந்த ஆண்டு இதே மாதத்தில் 122.5 மி.மீ. மழை பொழிந்தது. தில்லியில் இந்த ஆண்டு இதுவரை 790 மி.மீ. மழை பெய்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சராசரியாக செப்டம்பர் மாதம் 125.1 மி.மீ. மழை பொழியும் நிலையில் நடப்பாண்டு வழக்கத்திற்கு அதிகமாக 164.5 மி.மீ. மழை பொழிந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com