மத்திய பிரதேசம் குணா கிராமத்தில் உள்ள சட்டவிரோத மதுபானக் கூடத்தில் நடத்தப்பட்ட சோதனையில், காவல்துறையினருக்கு அதிர்ச்சிகரமான தகவல் கிடைத்ததுள்ளது.
கை பம்ப்பில் தண்ணீருக்குப் பதிலாக மதுபானம் வருவதை கண்டறிந்த காவல் துறையினர் அதிர்ச்சியடைந்தனர்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்கள் குடியிருப்பில் இருந்து சில நூறு மீட்டர் தொலைவில், தரையில் மதுபான தொட்டிகளை புதைத்து, அதன் மேல் ஒரு கை பம்பை நிறுவி உள்ளனர். அந்த கை பம்ப் மதுபானம் அடங்கிய தொட்டியுடன் இணைக்கப்பட்டுள்ளது.
கை பம்பில் இருந்து மதுபானம் எடுக்கப்பட்டு, விற்பனை செய்யப்பட்டு வந்ததுள்ளது.
தகவல் அறிந்த காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு செல்வதற்குள், குற்றவாளிகள் தப்பியோடிவிட்டனர். சட்டவிரோத குற்றத்தில் ஈடுபட்ட 8 சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டதுடன், அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதையும் படிக்க: பொது இடங்களில் சார்ஜ் செய்வோர் கவனத்திற்கு...
அக்கிராமத்தில் ஒவ்வொரு வீட்டிலும் மதுபானம் தயாரிக்கப்படுகிறது. காவல் துறையினர் கூடுதலாக ஆய்வு நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.