மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

இன்ஃபோசிஸ் தலைவர் ரவிக்குமார் ராஜிநாமா!

நாட்டின் முன்னணி மென்பொருள் நிறுவனமான இன்ஃபோசிஸ் தலைவர் எஸ். ரவிக்குமார் திடீரென ராஜிநாமா செய்துள்ளார்.

News image
Updated On :12 அக்டோபர் 2022, 3:00 am

DIN


நாட்டின் முன்னணி மென்பொருள் நிறுவனமான இன்ஃபோசிஸ் தலைவர் எஸ். ரவிக்குமார் திடீரென ராஜிநாமா செய்துள்ளார். ரவிக்குமார் ராஜிநாமா செய்ததற்கான எந்த காரணத்தையும் நிறுவனம் தெரிவிக்கவில்லை.

மென்பொருள் தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைவர் ரவிக்குமார் தனது பதவியை செவ்வாய்கிழமை (அக்.11) முதல் ராஜிநாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது ராஜிநாமா குறித்து பங்குச்சந்தைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இன்ஃபோசிஸ் தலைவர் பொறுப்பில் இருந்து ரவிக்குமார் ராஜிநாமா செய்துள்ளது நிறுவனத்துக்கு பெரும் இழப்பு எனவும்,  நிறுவனத்திற்கு அவர் ஆற்றிய சேவைகளுக்காக அந்நிறுவனத்தின் இயக்குநர் குழு பாராட்டுகளைத் தெரிவித்துள்ளது. 

அமெரிக்காவின் நியூயார்க்கில் வசிக்கும் ரவிக்குமார், இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் 20 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். 2016 ஆல் தலைவராக நியமிக்கப்படுவதற்கு முன்பு இன்ஃபோசிஸ் நிர்வாகக் குழுவின் ஒரு பகுதியாக நிறுவனம் முழுவதும் பல்வேறு பொறுப்புகளை வகித்தார் மற்றும் காப்பீடு மற்றும் கட்டண வணிகத்தை வழிநடத்தினார். இன்ஃபோசிஸ்  நிறுவனத்தின் மூன்றாவது அதிக சம்பளம் பெற்று வந்த நிர்வாகி ரவிக்குமார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் இரண்டாம் காலாண்டு முடிவு நாளை வியாழக்கிழமை(அக்.13) வெளியாக உள்ளது. அன்று பங்குதாரர்களிடம் இருந்து பங்குகளை திரும்பப் பெற முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. 

செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் பங்கு விலை 2.65 சதவீதமாக சரிந்து ரூ.1,423,90 வர்த்தகம் முடிவடைந்தது. 

ரவிக்குமார், இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் சர்வதேச அளவில் உள்ள அனைத்து தொழில் சேவை பிரிவுகளையும் கவனித்துக் கொண்டார். அவர் ஆலோசனை, டிஜிட்டல் விற்பனைகள், தொழில்நுட்ப வளர்ச்சி, உள்கட்டமைப்பு, பொறியியல் தரவு மற்றும் பகுப்பாய்வு, கிளவுட் மற்றும் சேவை வரிகளை கவனித்துக் கொண்டார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.