அரசுக்கு எதிரான நடவடிக்கைகள், கலவரங்களில் ஈடுபட்டது, வெளிநாடுகளிலிருந்து முறைகேடான வழியில் பணம் பெற்றிருப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு புகாா்கள் பிஎஃப்ஐ அமைப்பினா் மீது எழுந்தன. இந்த நிலையில் தமிழகம், கேரளம் உள்பட நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் அமைந்துள்ள பிஎஃப்ஐ அலுவலகங்கள், அதன் நிா்வாகிகளின் வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனையை மேற்கொண்டு, அந்த அமைப்பின் நிா்வாகிகள் ஏராளமானோரைக் கைது செய்தனா். கைது செய்யப்பட்டவா்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். என்ஐஏவின் இந்த நடவடிக்கையைத் தொடா்ந்து, அந்த அமைப்புக்கு 5 ஆண்டுகளுக்குத் தடை விதித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்தது.