முலாயம் சிங் மறைவு: மனஉளைச்சல் ஏற்பட்டு வீட்டை விட்டு வெளியேறி சிறுவன்!

சமாஜ்வாதி தலைவர் முலாயம் சிங் யாதவின் மறைவைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுவன் அவரைக் காண விட்டை விட்டு வெளியேறியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
முலாயம் சிங் மறைவு: மனஉளைச்சல் ஏற்பட்டு வீட்டை விட்டு வெளியேறி சிறுவன்!
Updated on
1 min read

சமாஜ்வாதி தலைவர் முலாயம் சிங் யாதவின் மறைவைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுவன் அவரைக் காண விட்டை விட்டு வெளியேறியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மஹாராஜ்கஞ்ச் மாவட்டம், நௌதன்வாவைச் சேர்ந்த 12 வயது சிறுவனின் பெயர் சாரநாத் யாதவ். இவன் முலாயம் சிங் யாதவால் ஈர்க்கப்பட்டவன். அவரின் மறைவு குறித்து அறிந்ததும் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி, இறுதியாக அவரை காண வேண்டும் என்று வீட்டை விட்டு வெளியேறியுள்ளான். 

சிறுவன் கோரக்பூரையும், பின்னர் லக்னௌவையும் அடைந்துள்ளான். பின்னர். யாரோ தனக்கு தவறான விலாசத்தைக் கொடுத்ததாகவும், எட்டாவாவை அடைவதற்குப் பதிலாக, கான்பூரில் இறங்கினேன் என்று அவன் கூறினான். 

கான்பூரில், சிறுவன் சுற்றித் திரிவதைக் கண்ட ஜிஆர்பி அதிகாரிகள் அவனை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். பின்னர்,  அவனது பெற்றோரைத் தொடர்புகொண்டு சிறுவனை அழைத்துச் செல்லும்படி கூறினோம். பெற்றோர்கள் காவல் நிலையத்துக்கு விரைந்துள்ளதாக அந்த அதிகாரி கூறினார். 

தான் முலாயம் சிங்கின் தீவிர ஆதரவாளர் என்றும், மறைந்த தலைவருக்காகத் தொடர்ந்து பணியாற்றுவேன் என்றும் அந்த சிறுவன் தெரிவித்தான். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com