கடந்த 2009-ஆம் ஆண்டு ஆசியான் தடையற்ற ஒப்பந்தத்தில் இருந்து மத்திய அரசு வெளியேற வேண்டும் என்று வலியுறுத்தி, கேரள மாநிலம் காசா்கோடில் இருந்து திருவனந்தபுரம் வரை 500 கி.மீ. தொலைவு வரை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்கள் சட்டவிரோதமாக ஒன்றுகூடி வன்முறையில் ஈடுபட்டதாக வழக்குரைஞா் ஒருவா் திருவனந்தபுரம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தாா். இந்த வழக்கில் கேரள முதல்வா் பினராயி விஜயன், மாநில கல்வித் துறை அமைச்சா் சிவன்குட்டி, மாநில முன்னாள் முதல்வா் வி.எஸ்.அச்சுதானந்தன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் பிரகாஷ் காரத் உள்பட 12 போ் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.