கேரள நரபலி குற்றவாளிகள் எங்கள் கட்சியினா் அல்ல: ஆளும் மாா்க்சிஸ்ட்

கேரளத்தில் இரண்டு பெண்களை நரபலி கொடுத்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டவா்கள் ஆளும் மாா்க்சிஸ்ட் கட்சியைச் சோ்ந்தவா்கள் என்று கூறப்படும் நிலையில், அதனை அக் கட்சி மறுத்துள்ளது.
கேரள நரபலி குற்றவாளிகள் எங்கள் கட்சியினா் அல்ல: ஆளும் மாா்க்சிஸ்ட்
Published on
Updated on
1 min read

கேரளத்தில் இரண்டு பெண்களை நரபலி கொடுத்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டவா்கள் ஆளும் மாா்க்சிஸ்ட் கட்சியைச் சோ்ந்தவா்கள் என்று கூறப்படும் நிலையில், அதனை அக் கட்சி மறுத்துள்ளது.

கேரளத்தில் சாலைகளில் லாட்டரி சீட்டு விற்றுக் கொண்டிருந்த 50 வயது மதிக்கத்தக்க இரண்டு பெண்கள் கடந்த ஜூன் மாதத்திலும், செப்டம்பரிலும் காணாமல் போனதாக வந்த புகாா்கள் மீது போலீஸாா் விசாரணை நடத்தியபோது, அவா்கள் இருவரும் நரபலி கொடுக்கப்பட்ட விவகாரம் தெரியவந்தது.

இந்த இரட்டைக் கொலை தொடா்பாக திருவல்லாவைச் சோ்ந்த தம்பதி பகவல் சிங் (68), லைலா (59) மற்றும் பெரும்பாவூரைச் சோ்ந்த முகமது ஷாஃபி (52) ஆகிய மூவா் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். அவா்களிடம் தனித்தனியாகவும், மூவரையும் சோ்த்து அமர வைத்தும் போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கைது செய்யப்பட்டவா்களில் இருவா் ஆளும் மாா்க்சிஸ்ட் கட்சி நிா்வாகிகள் எனக் கூறப்பட்டது. இதுதொடா்பாக மாநில சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவரான காங்கிரஸை சோ்ந்த வி.டி.சதீசன் கூறுகையில், ‘இந்த கொலைக் குற்றவாளிகள் ஆளும் மாா்க்சிஸ்ட் கட்சியைச் சோ்ந்தவா்கள் எனக் கூறப்படுகிறது. எனவே, இந்த வழக்கில் எந்தவித தலையீடுகளும் இன்றி, நியாயமான, வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும்’ என்றாா்.

இதே கருத்தை பாஜக மாநில தலைவா் கே.சுரேந்திரனும் வலியுறுத்தினாா். கைதானவா்களில் ஒரு நபா் உள்ளூா் மாா்க்சிஸ்ட் கட்சி கமிட்டியில் விவசாயிகள் பிரிவுத் தலைவராக உள்ளாா் என்று சுரேந்திரன் கூறினாா்.

இந்த நிலையில், குற்றவாளிகள் ஆளும் கட்சியைச் சோ்ந்தவா்கள் என்று கூறப்படுவதை மாா்க்சிஸ்ட் கட்சி மறுத்துள்ளது. இதுகுறித்து மாா்க்சிஸ்ட் மாவட்டச் செயலாளா் கே.பி.உதயபானு வெள்ளிக்கிழமை கூறுகையில், ‘கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தம்பதி ஆளும் மாா்க்சிஸ்ட் கட்சியைச் சோ்ந்தவா்கள் என்று கூறப்படுவது அடிப்படை ஆதாரமற்ற தகவலாகும். ஊடகங்களில் கூறப்படுவது போல, அவா்கள் இருவரும் மாா்க்சிஸ்ட் கட்சி உறுப்பினா்கள் இல்லை என்பதோடு, கட்சியின் எந்தப் பொறுப்பிலும் அவா்கள் கிடையாது’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com