சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

ஊழலில் ஈடுபடும் மூத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை: மெகபூபா முப்தி

 தரவரிசையில் கீழே உள்ள அதிகாரிகள் விசாரணையின்றி வேலையிலிருந்து நீக்கப்படுகிறார்கள். ஆனால்,ஊழலில் ஈடுபடும் மூத்த அதிகாரிகள் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மெகபூபா முப்தி குற்றச்சாட்டு.

News image
Updated On :14 அக்டோபர் 2022, 10:42 am

DIN

தரவரிசையில் கீழே உள்ள அதிகாரிகள் விசாரணையின்றி வேலையிலிருந்து நீக்கப்படுகிறார்கள். ஆனால்,ஊழலில் ஈடுபடும் மூத்த அதிகாரிகள் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மெகபூபா முப்தி குற்றம் சாட்டியுள்ளார்.

 ஜம்மு-காஷ்மீர் அரசாங்கம் அண்மையில் 36 காவல் துறை அதிகாரிகளை அவர்களது பணிக்காலம் முடியும் முன்பே அவர்களுக்கு ஓய்வளித்து அறிவித்தது. ஊழலில் ஈடுபட்டது, செயல்பாடுகளில் குறைபாடு மற்றும் சமுதாயத்திற்கு எதிரான செயல்களில் ஈடுபடுவது போன்றன அவர்களுக்கு பணி ஓய்வு கொடுக்கப்பட்டதற்கு காரணங்களாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, மெகபூபா முப்தியின் இந்த குற்றச்சாட்டு முக்கியத்துவம் பெறுகிறது. 

இது குறித்து ட்விட்டர் பதிவு ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். 

அந்தப் பதிவில் அவர் கூறியிருப்பதாவது: “துணை ஆளுநரின் கீழான நிர்வாகம் ஊழலில் ஈடுபடும் மூத்த அதிகாரிகளின் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. 2019ஆம் ஆண்டுக்குப் பிறகு புதிய அதிகாரிகள் பலர் உருவாகியுள்ளனர். அவர்களின் குற்றங்கள் மீது எந்த ஒரு விசாரணையோ, நடவடிக்கையோ எடுக்கப்படவில்லை. ஆனால், தரவரிசை அடிப்படையில் கீழே உள்ள அதிகாரிகள் எந்த ஒரு விசாரணையுமின்றி வேலையிலிருந்து நீக்கப்படுகின்றனர்.” என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.