நடிகர் விக்ரம் நடிப்பில் இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் திரைப்படத்தின் படப்பிடிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விக்ரம் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘கோப்ரா’ மற்றும் ‘பொன்னியின் செல்வன்’ படங்கள் வணிக ரீதியாக வெற்றிபெற்றதால் விக்ரம் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
இதையும் படிக்க: ''என் கனவு நிறைவேறியது'' - 'வாரிசு' இசையமைப்பாளர் தமன் பதிவு
இந்நிலையில், விக்ரம் - பா.ரஞ்சித் இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு வருகிற அக்.18 ஆம் தேதி ஆந்திர மாநிலம் கடப்பாவில் துவங்க உள்ளதாகவும் அங்கு முடிந்ததும் அடுத்தகட்ட படப்பிடிப்பு மதுரையில் நடைபெற உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இப்படம், கோலார் தங்கச் சுரங்கத்தில் அடிமைகளாக இருந்த தமிழர்களைப் பற்றிய கதை எனக் கூறப்படுகிறது.