நாங்கள் இன்னும் இறந்துவிடவில்லை. இப்போதுதான் எங்களுக்கு 30 வயதாகிறது என்று, கார்ட்டூன் நெட்வொர்க் சேனலுக்காக கண்ணீர்விட்டவர்களுக்கு விளக்கம் அளித்திருக்கிறது சேனல் நிர்வாகம்.
கார்டூன் நெட்வொர்க் தொலைக்காட்சி சரியாக 30 ஆண்டுகளுக்கு முன் இதே அக்டோபரில் தான் தனது ஒளிபரப்பைத் துவங்கியது. இந்த நிலையில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு இதே அக்டோபரில் தனது ஒளிபரப்பை நிறுத்தவுள்ளதாக செய்திகள் வெளியாகின. அதாவது கார்ட்டூன் நெட்வொர்க் சேனல் வார்னர் ப்ரோஸ் நிறுவனத்துடன் இணையவுள்ளதாக தகவல்கள் கூறின.
ஆனால் அதனை மறுத்து சேனல் நிர்வாகமே டிவீட் செய்து, கண்ணீர்விட்டுக் கொண்டிருந்தவர்களை சிரிப்பில் ஆழ்த்தியுள்ளது.
1990 முதல் 2000 வரையிலான காலக்கட்டங்களில் தங்களது சிறார் பருவதைக் கடந்தவர்களுக்கு மிகவும் பிடித்த தொலைக்காட்சி சேனல்களில் ஒன்றாக இருப்பது கார்ட்டூன் நெட்வொர்க். அதில் ஒளிபரப்பாகும் டாம் அண்ட் ஜெர்ரி என்றாலே பலருக்கும் கொள்ளைப்பிரியம்.
பலரது குழந்தைப் பருவத்தை மிகவும் மறக்கமுடியாத நாள்களாக மாற்றியதில் இந்த சேனலுக்கும் மிக முக்கிய இடமுண்டு.
இந்த நிலையில், அந்த சேனல் மூடப்படுவதாக கடந்த வாரம் செய்திகள் வெளியாகின. இதனை உண்மை என் நம்பிய மக்களும் சமூக வலைத்தளங்களில் தங்களது வருத்தங்களையும் துக்கங்களையும் வெளிப்படுத்தியிருந்தனர்.
ஏராளமானோர் மீம்ஸ்களை வெளியிட்டு, இணையம் முழுக்க வைரலாக்கினர். பலர் ஸ்டேட்டஸ் வைத்து கண்ணீர் அஞ்சலி தெரிவித்திருந்தனர்.
ஆனால், ரசிகர்கள் வருத்தம் அடைவது போல, கார்ட்டூன் நெட்வொர்க் சேனல் மூடப்படப்போவதில்லை என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. நாங்கள் இன்னும் சாகவில்லை. இப்போதுதான் எங்களுக்கு 30 வயதாகிறது என்று சேனல் நிர்வாகம் கூறியுள்ளது.
இந்த தகவல் பகிரப்பட்ட நாள் அன்றே அதனை சுமார் 2 லட்சம் பேர் லைக் செய்து 29 ஆயிரம் பேர் ரிடிவீட் செய்திருந்தனர். இன்று இது பல மடங்காகியிருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கடைசி 13 நிமிடங்களில் 3 கோல்கள்! அதிரடியாக வென்ற அர்ஜென்டினா!

வன்கொடுமை வழக்கு: சேவூரில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

சேவூரில் விவசாயிகள் மீது போடப்பட்ட வன்கொடுமை வழக்கை கண்டித்து ஆர்ப்பாட்டம்

இன்றைய செய்திகள் ஜூலை 8 - நேரலை
விடியோக்கள்

ஒரு அக்காவைப் போலவே அமைச்சர் கீர்த்தனா மாணவியிடம் பேசினார்! - அமைச்சர் Rajmohan | TVK

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna



