டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

ம.பி.யில் சட்டவிரோத பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: 3 பேர் பலி!

மத்தியப் பிரதேசத்தின், மொரேனா மாவட்டத்தில் சட்டவிரோத பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டதில் மூவர் உயிரிழந்தனர்.

News image
ஆம்பூர் காலணி தொழிற்சாலையில் தீ விபத்து
Updated On :20 அக்டோபர் 2022, 9:44 am

DIN

மத்தியப் பிரதேசத்தின், மொரேனா மாவட்டத்தில் சட்டவிரோத பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டதில் மூவர் உயிரிழந்தனர். 

பன்மோர் காவல் நிலையம் அருகே உள்ள பட்டாசு ஆலையில் சட்டவிரோதமாகப் பட்டாசுகள் தயாரித்து வந்தனர். இந்நிலையில், திடீரென வெடிவிபத்து ஏற்பட்டதில் சம்பவ இடத்திலேயே மூன்று பேர் உயிரிழந்தனர். 7 பேர் காயமடைந்தனர். 

இடிபாடுகளில் மேலும் சிலர் புதைந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் காவல்துறை மற்றும் நிர்வாக அதிகாரிகள் ஜேசிபியுடன் சம்பவ இடத்திற்கு வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த தொழிற்சாலையில் தீபாவளிக்கான பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
குண்டுவெடிப்பில் கட்டடம் முழுவதும் சேதமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.