ம.பி.யில் சட்டவிரோத பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: 3 பேர் பலி!
மத்தியப் பிரதேசத்தின், மொரேனா மாவட்டத்தில் சட்டவிரோத பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டதில் மூவர் உயிரிழந்தனர்.


மத்தியப் பிரதேசத்தின், மொரேனா மாவட்டத்தில் சட்டவிரோத பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டதில் மூவர் உயிரிழந்தனர்.
பன்மோர் காவல் நிலையம் அருகே உள்ள பட்டாசு ஆலையில் சட்டவிரோதமாகப் பட்டாசுகள் தயாரித்து வந்தனர். இந்நிலையில், திடீரென வெடிவிபத்து ஏற்பட்டதில் சம்பவ இடத்திலேயே மூன்று பேர் உயிரிழந்தனர். 7 பேர் காயமடைந்தனர்.
இடிபாடுகளில் மேலும் சிலர் புதைந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் காவல்துறை மற்றும் நிர்வாக அதிகாரிகள் ஜேசிபியுடன் சம்பவ இடத்திற்கு வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த தொழிற்சாலையில் தீபாவளிக்கான பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
குண்டுவெடிப்பில் கட்டடம் முழுவதும் சேதமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...