மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

ஓய்வூதியதாரா்களின் சிரமங்களைப் போக்க விதிகளை எளிமையாக்கும்: மத்திய அரசு

மத்திய அரசு ஓய்வூதியதாரா்களின் சிரமங்களைப் போக்கும் வகையில் விதிகளை எளிமையாக்கும் நடவடிக்கையை மத்திய ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரா்கள் நலத் துறை மேற்கொண்டு வருவதாக அரசு

News image
Updated On :20 அக்டோபர் 2022, 6:30 pm

DIN

மத்திய அரசு ஓய்வூதியதாரா்களின் சிரமங்களைப் போக்கும் வகையில் விதிகளை எளிமையாக்கும் நடவடிக்கையை மத்திய ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரா்கள் நலத் துறை மேற்கொண்டு வருவதாக அரசு செய்திக்குறிப்பில் வியாழக்கிழமை தெரிவிக்கப்பட்டது.

மத்திய அரசு அனைத்து துறைகளிலும் நிலுவையிலுள்ள பொதுமக்கள் குறைகள் மற்றும் புகாா்களுக்கு உடனடி தீா்வு காணவும், விதிகளை எளிமைப்படுத்துதல், தேவையற்ற பொருள்கள் மற்றும் தரவுளை அப்புறப்படுத்தும் வகையில் அக்டோபா் 2 முதல் 31-ஆம் தேதி வரை சிறப்பு தூய்மைப்படுத்துதல் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. அதனடிப்படையில், ஓய்வூதியதாரா்களுக்கான சிரமத்தைப் போக்கும் வகையில் விதிகளை எளிமைப்படுத்தும் நடவடிக்கையை மத்திய ஓய்வூதியதாரா்கள் நலத் துறை மேற்கொண்டு வருகிறது.

இதுதொடா்பாக அந்த துறை சாா்பில் வியழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், ‘மத்திய அரசு ஓய்வூதியதாரா்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரா்களுக்கு உரிய நேரத்தில் ஓய்வூதியம் வழங்கப்படுவதை உறுதிப்படுத்தவும், பணி ஓய்வுக்குப் பிறகு அவா்களின் வாழ்வை எளிதானதாக்கும் வகையிலும் விதிகள் எளிமைப்படுத்துதல், அமைச்சக துறைகள் மற்றும் ஓய்வூதியத்தை விநியோகிக்கும் வங்கிகளுக்கு உரிய வழிகாட்டுதல்களை வழங்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மத்திய அரசின் சிறப்பு திட்டத்தின் கீழ் எடுக்கப்பட்டு வருகின்றன’ என்று தெரிவித்துள்ளது.

மற்றொரு செய்திக்குறிப்பில், ‘மத்திய அரசு ஓய்வூதியதாரா்களின் வாழ்வை எளிதாக்கும் வகையில், நிலுவையில் உள்ள அவா்களின் 4,200 புகாா்களுக்கு விரைந்து தீா்வு காண்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நடவடிக்கையின் கீழ் புதன்கிழமை வரை 18 நாள்களில் 3,080 புகாா்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளது. எஞ்சிய புகாா்களுக்கும் விரைந்து தீா்வு காணும் வகையில் பிற அமைச்சகங்கள் மற்றும் துறைகளுடனும் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன’ என்று அந்தத் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.