ஜம்முவில் கடந்த சில வாரங்களாக டெங்கு பாதிப்பு அதிகரித்து வருகின்றது. 2013-க்குப் பிறகு மிகப்பெரிய தொற்று பாதிப்பு என்று மருத்துவ நிபுணர் கூறுகின்றனர்.
இதுகுறித்து ஜம்மு அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை முதல்வர் டாக்டர் ஷஷி சுதன் ஷர்மா கூறுகையில்,
ஜம்முவில் 3,000க்கும் மேற்பட்டவர்கள் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தொற்று காரணமாக இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஜம்முவில் இதுவரை 3,376 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தனியார் மருத்துவமனையில் 100-க்கும் மேற்பட்டோர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த வாரத்திலிருந்து டெங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது. காய்ச்சலுடன் வரும் நோயாளிகளிடையே டெங்கு அறிகுறிக்கான நேர்மறைத்தன்மை அதிகரித்துள்ளது.
மருத்துவமனையில் சேர்க்கும் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. கொசுக்களால் பரவும் பருவகால வைரஸ் நோய் அனைத்து பகுதிகளுக்கும் வேகமாக பரவி வருவதாகவும், மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருவதாகவும் அவர் கூறினார்.
தினமும் 80-90 குழந்தைகள் மற்றும் கிட்டத்தட்ட 50-60 பெரியவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகிறார்கள்.
தாமதமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதே இறப்புக்கு காரணம். நிலைமையை சமாளிக்க மருத்துவமனை முழுமையாக தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரயில்வே நிதிக்கழகத்தில் உதவி மேலாளர் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பங்கள் வரவேற்பு!

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


