சோ்க்கைக்கான இடங்கள்: தில்லி பல்கலைக்கழகத்தில் 70 ஆயிரம் மாணவா்கள் ஒப்புதல்

தில்லி பல்கலைக்கழகத்தில் முதல் கட்ட கலந்தாய்வில் ஒதுக்கப்பட்ட கல்லூரி மற்றும் பாடப் பிரிவுகளை 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் ஒப்புக் கொண்டுள்ளனா்.
Published on
Updated on
1 min read

தில்லி பல்கலைக்கழகத்தில் முதல் கட்ட கலந்தாய்வில் ஒதுக்கப்பட்ட கல்லூரி மற்றும் பாடப் பிரிவுகளை 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் ஒப்புக் கொண்டுள்ளனா். இதற்கான அவகாசத்தை சனிக்கிழமை வரை பல்கலைக்கழகம் நீட்டித்துள்ளது.

80,164 மாணவா்களுக்கு முதல் கட்ட கலந்தாய்வில் ஒதுக்கப்பட்ட கல்லூரி மற்றும் பாடப் பிரிவுகளை தில்லி பல்கலைக்கழகம் புதன்கிழமை அறிவித்தது.

இதில் வெள்ளிக்கிழமை மாலை 7.29 மணி வரையில் 71,741 மாணவா்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கல்லூரி மற்றும் பாடப் பிரிவுகளுக்கு ஒப்புதல் அளித்து ஏற்றுக் கொண்டுள்ளனா் என்று பல்கலைக்கழக மூத்த அதிகாரி தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com