ஜார்க்கண்டில் மென்பொறியாளர் 10 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம்! 

ஜார்க்கண்டின் மேற்கு சிங்பூம் மாவட்டத்தில் 26 வயதான மென் பொறியாளர் 10 பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். 
காஸியாபாத்தில் மீண்டும் ஒரு நிர்பயா சம்பவம்
காஸியாபாத்தில் மீண்டும் ஒரு நிர்பயா சம்பவம்
Published on
Updated on
1 min read

ஜார்க்கண்டின் மேற்கு சிங்பூம் மாவட்டத்தில் 26 வயதான மென் பொறியாளர் 10 பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். 

வீட்டியிலிருந்து பணிபுரிந்துவரும் மென்பொறியாளரான இளம்பெண், வியாழன் மாலை தனது காதலனுடன் இருசக்கர வானத்தில் வெளியே சென்றுள்ளனர். அப்போது, 10 பேர் கொண்ட கும்பல் இருவரையும் வழிமறித்து, பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. 

இந்த சம்பவம் குறித்து முஃபசில் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, இதன் பின்னணியில் உள்ளவர்களைக் கண்டறிய விசாரணை மேற்கொண்டு வருவதாக காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார். 

பாதிக்கப்பட்ட பெண் பிரபல ஐடி நிறுவனத்தில் பணிபுரிகிறார் என்று போலீசார் தெரிவித்தனர். இளம்பெண் அவர்களிடமிருந்து தப்பித்து, தன் குடும்பத்தினரிடம் நடந்த சம்பவத்தைக் கூறியதன் அடிப்படையில், போலீசில் புகார் அளித்தனர். 

சம்பவம் நடந்த இடத்தில் குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com