சென்னையில் காங்கிரஸ் கமிட்டி கூட்டம்: போட்டியிடும் தொகுதிகள் குறித்து ஆலோசனைஈரோடு மாவட்டம் கொடுமுடியில் கே.பி.சுந்தராம்பாள் சிலையை முதல்வர் திறந்துவைத்தார்ஈரானை உலுக்கும் தாக்குதல்கள்: பலி 1,300-ஐ கடந்தது!பெண்கள் முன்னேற்றத்துக்கு அரசு துணை நிற்கிறது: முதல்வர் ஸ்டாலின் மகளிர் நாள் வாழ்த்துமாமல்லபுரத்தில் சுற்றுலாத் தலங்களை மக்கள் இன்று கட்டணமின்றி பார்வையிட அனுமதிமார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியதுகுடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மகளிர் நாள் வாழ்த்து!பஹ்ரைன் துறைமுகத்தில் ஈரான் தாக்குதல்!டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

ராஜ்நாத் சிங்குடன் ரஷிய பாதுகாப்பு அமைச்சர் பேச்சு

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் ரஷிய பாதுகாப்புத் துறை அமைச்சர் சொ்கேய் ஷாய்கு தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தினார்.

News image
கோப்புப்படம்
Updated On :26 அக்டோபர் 2022, 2:09 pm

DIN

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் ரஷிய பாதுகாப்புத் துறை அமைச்சர் சொ்கேய் ஷாய்கு தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்த பேச்சுவார்த்தை குறித்து மத்திய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்தியில்,

“ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சர் சொ்கேய் ஷாய்கு, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இன்று உரையாடினார். இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் உக்ரைனில் மோசமடைந்து வரும் நிலைமை குறித்து இரு அமைச்சர்களும் விவாதித்தனர்.

உக்ரைனில் நிலவும் சூழல் குறித்து இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சருக்கு ரஷிய அமைச்சர் விளக்கினார்.

இரு நாட்டிற்கிடையே மோதலை தவிர்த்து பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்று இந்தியாவின் நிலைபாட்டை மீண்டும் ராஜ்நாத் சிங் வலியுறுத்தினார். அணு ஆயுதங்களை பயன்படுத்துவது மனித குலத்தின் அடிப்படைக் கொள்கைகளுக்கு எதிரானது என்பதால் அணுசக்தியை நாடக்கூடாது என்றும் கூறினார்.”

ரஷியா- உக்ரைன் இடையேயான போர் 8 மாதங்களை கடந்துள்ள நிலையில், உக்ரைன் மீது ரஷியா தீவிர தாக்குதலை நடத்தி வருகின்றது. இதற்கு அமெரிக்க உள்பட உலகின் பல்வேறு நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், ஐ.நா.வில் தொடர்ந்து இந்தியா நடுநிலை வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.