அசாமின் கர்பிஅங்லாங் மாவட்டத்தில் ரூ.10 கோடி மதிப்புள்ள போதைப் பொருள்களை அசாம் போலீசார் கைப்பற்றினர்.
இதுதொடர்பாக போதைப்பொருள் கடத்தல்காரர்கள் 4 பேரை கைது செய்து, இரண்டு வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து காவல் உயர் அதிகாரி கூறுகையில்,
திலாய் காவல் நிலையத்திற்குள்பட்ட திலாய் தினியாலியில் சோதனை கூடம் அமைக்கப்பட்டது. அப்போது இரண்டு வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன.
அதில் சோதனை செய்ததில் 1.263 கிலோ ஹெராயின் அடங்கிய 100 பாக்கெட் சோப் கேஸ்கள் மற்றும் ரொக்கமாக ரூ.75,000 மீட்கப்பட்டது.
பின்னர், நால்வரையும் போலீஸ் குழு கைது செய்தது. கைதானவர்கள் டேனியல் கிதாரி (33), எம்டி சஹாபிர் அலி (57), கபானி எஸ் (22) மற்றும் சஹ்ஜன் அகமது பர்புயா (36) என அடையாளம் காணப்பட்டனர்.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு சுமார் 10 கோடி ரூபாய் என காவல்துறை அதிகாரி தெரிவித்தார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் விசாரணை நடந்து வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!

பூவரசன்குப்பம் லட்சுமி நரசிம்மர் கோயிலில் நரசிம்ம ஜெயந்தி சிறப்பு வழிபாடு!

ஓடிடியில் வெளியாகிறது மூன்றாம் பிறை!

பொதுத்துறை வங்கியில் வேலை வேண்டுமா? - உடனே விண்ணப்பிக்கவும்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

