மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ஜம்மு ரயில் நிலையத்தில் கைப்பற்றப்பட்ட வெடிபொருள்

கேட்பாரற்றுக் கிடந்த பையில் இரண்டு பெட்டிகளில் வெடிபொருள்களை ரயில்வே காவலர்கள் பறிமுதல் செய்துள்ளனர்.

News image

ஜம்மு ரயில் நிலையத்தில் கைப்பற்றப்பட்ட வெடிபொருள்

Updated On :27 அக்டோபர் 2022, 12:42 pm


ஜம்மு: ஜம்மு ரயில் நிலையத்துக்கு வெளியே இருந்த வாடகைக் கார்கள் நிறுத்துமிடத்துக்கு அருகே கேட்பாரற்றுக் கிடந்த பையில் இரண்டு பெட்டிகளில் வெடிபொருள்களை ரயில்வே காவலர்கள் பறிமுதல் செய்துள்ளனர்.

வாடகைக் கார்கள் நிறுத்துமிடத்துக்கு அருகே சந்தேகத்துக்குரிய வகையில் கேட்பாரற்றுக் கிடந்த பை குறித்து தகவல் கிடைத்தது. அந்த பையில் இரண்டு பெட்டிகள் இருந்தன. அதில் வெடிபொருள்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் 18 டெடோனேட்டர்கள், மெழுகு போன்ற ஒரு பொருள் 500 கிராம் எடையுடன் இருந்தது. சில மின்சார ஒயர்களும் இருந்தன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, சம்பா மாவட்டத்தில் சில பயங்கரவாதக் குழுவினர் நடமாட்டம் இருப்பதாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. இதனை காவல்துறையினர் கிழித்தெறிந்த நிலையில், ஜம்மு ரயில் நிலையம் அருகே வெடிபொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.