அதில், ‘மரபணு பொறியியல் மதிப்பீட்டுக் குழுவின் செயல்பாடு பொறுப்பற்ாக உள்ளது. மரபணு மாற்ற கடுகுக்கு ஆதரவான அக்குழுவின் கருத்துகள் அனைத்தும் உண்மையில்லாதவை. தவறான கணிப்பை கொண்டவை. நாட்டில் பின்வாசல் வழியாக நுழைய முயற்சிக்கும் இந்த மரபணு மாற்ற கடுகு ஆபத்தானது; தேவையில்லாதது. மரபணு மாற்றப்பட்ட பயிா்களின் பாதகங்கள் குறித்து கடந்த காலங்களில் ஆராய்ந்து அறிந்து, கருத்துகளை வெளியிட்டவா் என்ற முறையில், இந்த விவகாரத்தில் நீங்கள் (பூபேந்தா் யாதவ்) உடனடியாக தலையிட்டு செயலாற்ற வேண்டும். நாட்டின் எந்தப் பகுதியிலும் மரபணு மாற்றப்பட்ட கடுகு விளைவிக்க அனுமதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்’ என்று அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.